Haryana Woman Kills Husband With Lover : கடந்த சில நாட்களாகவே இணையதளம் அல்லது நாளிதழ்களை திறந்தால் திருமணம் மீது உறவால் ஏற்பட்ட விபரீதங்கள் தான் செய்திகளாக வருகின்றன. அதிலும் உத்திரபிரதேசத்தின் மீரட் நகரில், ஒரு பெண் தனது காதலருடன் சேர்ந்து கணவரை கொன்று ட்ரம்மில் உடலை வைத்திருந்த விவகாரம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. அது போன்ற ஒரு சம்பவம் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
Youtube பிரபலம்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள, பிவானி எனும் இடத்தை சேர்ந்தவர், ரவீனா. இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். Youtube சேனலும் வைத்திருக்கிறார். இது இவருக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர். இவருக்கு 32 வயதாகிறது.
இவர் தனக்கு பிடித்த மாதிரி வீடியோக்கள் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது பயோவில் “வெளித்தோற்றத்தை பார்த்து யாரும் என்னை எடை போடாதீர்கள்” எனும் வாசகத்தை வைத்திருக்கிறார். இதை பார்த்த நெடிசன்கள், இவர் செய்த வேலைக்கு ஏற்றவாறு தான் இந்த பயோவை வைத்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.
திருமணம் மீறிய உறவு..
ரவீனாவிற்கு 2017 ஆம் ஆண்டு பிரவீன் என்பவர் உடன் திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர்கள் குடும்பமாக, ஜூடி என்னும் கிராமத்தில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரவீனாவிற்கு, சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவரும் ஒரு youtuberதான். இருவரும் ஒரு வீடியோ கண்டன்டுக்காக பேச போய், அப்படியே அந்த பழக்கம் நட்பாக மாறி பின்னர் காதலாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து,ரவினா சுரேஷுடன் திருமணம் தாண்டி உறவில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கண்டித்த கணவர்..கொலை செய்த மனைவி!
ரவீனா, இப்படி ஒருவருடன் ஒன்றாக சேர்ந்து வீடியோ போடுவது அவரது கணவரான பிரவீனுக்கு, கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனைவியை அவர் கண்டித்து இருக்கிறார். கடந்த மார்ச் 25ஆம் தேதி அன்று, பிரவீன் வீட்டிற்கு வந்த போது தனது மனைவியும் அவரது காதல் எனும் ஒன்றாக இருப்பதை பார்த்ததாகவும், இதனால் இவர்களுக்கிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுரேஷ், இந்த நேரத்தில் அந்த இடத்திலிருந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
Woman YouTuber Kills Husband with Lover's Help
A shocking incident has come to light from #Bhiwani, #Haryana, where a 32-year-old woman YouTuber, Raveena, allegedly murdered her husband with the help of her lover and fellow YouTuber, Suresh (25).
According to reports, Raveena… pic.twitter.com/BNgy3BBUSY
— BNN Channel (@Bavazir_network) April 16, 2025
இதையடுத்து இரவு தூங்கும் போது, ரவீனா தனது கணவர் பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றதாகவும், இந்த உடலை அப்புறப்படுத்த தனது காதலனுக்கு போன் செய்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அங்கு விரைந்து வந்த, சுரேஷ் உடலை சூட்கேசில் கொண்டு சென்று அருகில் இருந்த சாக்கடையில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது. உடலை சூட்கேசி வைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லும் ஒரு சிசிடிவி வீடியோவும் வெளியாகியிருக்கிறது.
இருவரும் கைது..
இவர்கள் கொன்று வீசிய பிரவீனின் உடல் மார்ச் 28ஆம் தேதி அதாவது கொலைக்கு மூன்று நாட்களுக்குப் பின்பு கால்வாயில் கிடைத்துள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது. இதையடித்து, கணவரை கொன்றதாக கூறப்படும் ரவீனாவை போலீசார் கைது செய்திருக்கின்றனர். தன்னை நோக்கி ஆபத்து வருவதை தெரிந்து கொண்ட அவரது காதலன், சுரேஷ் தப்பியோடி இருக்கிறார். தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | குழந்தையை சிகிரெட் பிடிக்க வைத்த மருத்துவர்! வைரலான வீடியாேவால் சர்ச்சை..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ