முதலிரவுக்கு சென்ற மாப்பிள்ளை..மனைவி முக்காடை விலக்கியப் போது காத்திருந்த ட்விஸ்ட்!

Madhya Pradesh Man Finds Different Bride First Night : மத்திய பிரதேசத்தில் திருமணம் முடித்த அன்று இரவே முதல் இரவு அறைக்குள் சென்ற புது மாப்பிள்ளைக்கு  நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Yuvashree | Last Updated : Apr 24, 2025, 03:45 PM IST
  • மத்திய பிரதேசத்தில் நடந்த வினோதம்
  • முதலிரவில் மாறிய மணப்பெண்..
  • வைரலாகும் செய்தி...
முதலிரவுக்கு சென்ற மாப்பிள்ளை..மனைவி முக்காடை விலக்கியப் போது காத்திருந்த ட்விஸ்ட்!

Madhya Pradesh Man Finds Different Bride First Night : மத்திய பிரதேச மாநிலம் ராஜ் கார்க் நகரை சேர்ந்த ஐ டி ஊழியரான கமல் . இவர் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருக்கிறார்கள்.

பல இடங்களில் பெண் தேடி வந்த நிலையில் திருமண புரோக்கர் ஒருவர் பெரிய இடத்துப் பெண் என ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தை காட்டி இருக்கிறார். கமலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அந்த பெண் பிடித்த நிலையில் திருமண ஏற்பாடுகள் வேகம் எடுத்தன. தொடர்ந்து பிரம்மாண்டமாக திருமணமும் நடந்தது. தொடர்ந்து கமலின் வீட்டுக்கு அந்த புது பெண்ணை அழைத்து சென்றிருக்கின்றனர். முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.

இதனால் ஏதோ ஒரு தவறு நடக்கிறது என உணர்ந்த கமல் முதல் இரவு அறையில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்தபோது ஷாக் ஆகிவிட்டார். காரணம் அவர் தாலி கட்டியது ஒரு பெண் முதலிரவு அறையில் அலங்காரத்துடன் இருந்தது மற்றொரு பெண். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிடலாம் என்று இருந்த அந்த பெண்ணை குடும்பத்தினர் பிடித்து அறைக்குள் அடைத்து வைத்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது இளம் பெண் ஒருவரின் முகத்தை காட்டி திருமணம் செய்து வைத்து நிலையில் மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வருவதற்குள் வேறு ஒரு பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர் புது பெண் போல் நடித்தும் இருக்கிறார். மணமகனின் குடும்பத்தினர் அசந்து தூங்கும் நேரத்தில் வீட்டில் உள்ள நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் செல்ல அந்த பெண் திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருந்திருக்கிறது.

திருமண புரோக்கர் கமலின் குடும்பத்தை நன்கு அறிந்தவர் என்பதால் இளம் பெண்ணின் புகைப்படத்தை காட்டி திருமணம் செய்து வைத்து, திருடுவதற்கு மற்றொரு பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். மணமகன் உள்ளிட்டவரை மயக்கமடைய வைக்க குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுக்க தயாராக இருந்திருக்கின்றனர். அவருக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து மகளை திருமணம் செய்து கொடுக்க வைத்திருக்கின்றனர். தற்போது ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மணமகளாக நடித்த பெண் , இடைத்தரகர்  உட்பட  ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். முதல் இரவு அன்று  புது மாப்பிள்ளைக்கு நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | மகளின் மாமனாருடன் தாய்க்கு காதல்! நகை, பணத்துடன் ஓட்டம்..வைரல் செய்தி

மேலும் படிக்க | அரசு பேருந்தில் உடலுறவு..வைரலான வீடியோ! நடத்துனருக்கு வந்த வேட்டு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News