Pahalgam Attack Terrorists Killed Not Only Hindus: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம், தற்போது இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா சந்தேகப்படும் நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்கள் கூறும் விஷயங்கள் மனதை பதற வைக்கிறது. இதில் இந்துக்களை மட்டும் கொன்றதாக ஒரு பக்கம் கூறப்படும் நிலையில், இஸ்லாமியர் ஒருவரும் இதில் சுட்டுத்தள்ளப்பட்டிருக்கிறார். மனிதத்தையும் மனிதர்களையும் பாதுக்காக்க இவர் செய்த விஷயம் தற்போது இணையவாசிகள் மத்தியில் பரவலாக பேசப்படும் விஷயமாக உள்ளது.
பஹல்காம் தாக்குதல்:
தெற்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பஹல்காம் பள்ளத்தாக்கில், சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில், 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. தேனிலவிற்கு சென்ற கடற்படை அதிகாரி, குடும்பத்துடன் சுற்றுலா சென்ற தெலங்கான உளவுத்துறை அதிகாரி, வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் என பலர் இதில் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா சந்தேகிக்கின்றது. இதையடுத்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம், மனிதத்தன்மையே இல்லாமல் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் காஷ்மீர் மக்கள் அடிப்பட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட இஸ்லாமியர்:
பஹல்காம் தாக்குதலில், இந்துக்களை மட்டும் குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றதாக சில தகவல்கள் பரவ ஆரம்பித்தது. துப்பாக்கியுடன் வந்தவர்கள், குரானின் ஒரு குறிப்பிட்ட வரியை சொல்ல சொன்னதாகவும், அப்படி சொல்லாதவர்களை பேண்டை கழற்றி பார்த்து விட்டு இந்துக்கள் என தெரிந்த பின்பு கொன்றதாகவும் சில தகவல்கள் பரவியது. ஆனால், இதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் எந்த சான்றுகளும் வெளியாகவில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு, சிலர் மதவாத அரசியல் செய்வதாகவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில், கொல்லப்பட்டவர்களுள், இஸ்லாமியர் ஒருவரும் இருக்கிறார் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கிறார்.
அவரது பெயர், சையத் அடில் ஹுசைன் ஷா. குதிரை சவாரி தொழில் செய்து வந்த இவர், பஹல்காமின் உள்ளூர்வாசி. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, பயங்கரவாதி ஒருவர் பெண் ஒருவரை தாக்கும் நோக்கில் அவரை நெருங்கியதாகவும், எப்போது கையில் ஆயுதம் ஏதுமின்றி சையத் தாக்குதல் நடத்த வந்தவரை தைரியமாக தாக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதியின் கையில் இருந்து துப்பாக்கியை பிடுங்க முயற்சி செய்தபோது, அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உதவிய உள்ளூர்வாசிகள்:
துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஆறுதல் படுத்தி, அவர்கள் பத்திரமாக வெளியேற அவ்வூர் மக்கள் உதவி செய்தது அனைவரையும் நெகிழ வைத்தது. அங்கு டாக்சி ஓட்டுபவர்கள், அடிப்பட்டவர்களை தூக்கிப்போட்டுக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்த சம்பவத்தையும் வீடியோக்களாக பார்க்க முடிந்தது.
ஒரு சிலர், இந்த பயங்கரவாத தாக்குதலை மையமாக வைத்துக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம் போட்டு வரும் நிலையில், மேற்கூறிய நெகிழ்ச்சி சம்பவங்கள் குறித்து பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
மேலும் படிக்க | பகல்காம் தாக்குதல் சம்பவம்.. தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ