Navy Officer Vinay Narwal Killed Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் நகரில் ஏப்ரல் 22ஆம் தேதியான நேற்று பொதுமக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில், இளம் கடற்படை அதிகாரியும் ஒருவர். அவர் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் மனதை நொறுக்கும் வகையில் இருக்கிறது.
பஹல்கம் தாக்குதல்:
தெற்கு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பஹல்கம் நகரில், நேற்று (ஏப்ரல் 22) பயங்கரவாத தாக்குதல் நடைப்பெற்றது. இதில், வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்திருந்தவர்கள் முதல், உள்ளூரில் இருந்தவர்கள் வரை மொத்தம் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பிறகு, நாடே அதிர்ச்சியடைந்திருக்கும் சமயத்தில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தாக்குதலில் உயிரிழந்த 26 பேர் குறித்த தகவல்களும் தற்போது பலர் மனங்களையும் பதற வைத்திருக்கிறது. இதில், உயிரிழந்த கடற்படை அதிகாரி குறித்த தகவல்கள் பலரை கலங்க வைத்திருக்கிறது.
உயிரிழந்த கடற்படை அதிகாரி:
இந்திய கடற்படை அதிகாரியான லெஃப்டினண்ட் வினய் நர்வாலுக்கு வயது 26. இவர் கொச்சியில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். ஹரியானாவை சொந்த ஊராக கொண்ட இவருக்கு, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் நடந்தது. இவரும் இவரது மனைவியும் திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு, கடந்த திங்கட்கிழமை அன்று ஹனிமூனுக்காக ஜம்மு காஷ்மீருக்கு வந்திருக்கின்றனர்.
இவர்கள், ஹனிமூனுக்காக வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால், விசா வராத காரணத்தால், ஜம்மு காஷ்மீருக்கு தேனிலவு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
உயிரிழந்த இளம் கடற்படை அதிகாரியின் மனைவியின் பெயர் ஹிமான்ஷி நர்வல். இவரும், அவரது கணவரும் ஒரு கடையில் பேல் பூரி சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும், அப்போது ஒருவர் வந்து தனது கணவர் இஸ்லாமியரா இல்லையா என்பதை தெரிந்து கொண்டு சுட்டுவிட்டதாகவும் கூறினார்.
இது குறித்து உயிரிழந்த கடற்படை அதிகாரியின் வினய் நர்வலின் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் பேசியிருக்கின்றனர். அப்போது, இவருக்கு சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்து ரிசப்ஷன் நடந்ததாகவும், இன்று அவரது இறப்பு செய்தி வந்தது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
இந்துக்கள் மட்டும் உயிரிழப்பா?
இந்த தாக்குதல், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா ஆட்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில், உயிரிழந்தவர்கள் அனைவருமே ஆண்கள். அதிலும் ஒருவர் தெலங்கானாவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி. இப்படி, பயங்கரவாதிகள் அவர்களை கொல்ல வந்த போது குரானில் இருந்து ஒரு வாக்கியத்தை சொல்ல சொன்னதாகவும், அப்படி சொல்லாதவர்களை சுன்னத் செய்திருக்கின்றனரா இல்லையா என்பதை பார்த்து சுட்டுக்கொன்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 'போய் மோடியிடம் சொல்...' கணவனை கண் முன்னே இழந்த பெண்ணிடம்... தீவிரவாதிகள் சொன்னது
மேலும் படிக்க | பகல்காம் தாக்குதல் : பாரமுல்லாவில் எல்லை தாண்டிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ