Groom Stops Wedding After Hearing Channa Mereya : திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது நடைபெறும் திருமணங்கள் அப்படியானதாக இருப்பதில்லை. திருமணமான ஆறு மாதங்களில் விவாகரத்து கேட்பது, திருமணத்தன்றே மணப்பெண்ணை மணமகன் கீழ்த்தரமாக நடத்துவது போன்ற விஷயங்கள் நடைபெறுகிறது. இப்போதும் அதே போன்ற ஒரு சம்பவம்தான் நடந்திருக்கிறது. இது பெரிதாக புதிதான விஷயம் இல்லை என்றாலும், ஆச்சரியத்தை அழிக்கும் விஷயமாக இருக்கிறது. அந்த மணமகன் திருமணத்தை திடீரென நிறுத்தியது ஏன்? இதுகுறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
திருமணத்தை நிறுத்திய மணமகன்..
இந்த திருமணம் புது தில்லியில் நடைபெற இருந்தது. திருமணத்திற்காக நாள்-கிழமை குறித்து, பத்திரிக்கை அடித்து, மண்டபம் புக் செய்து மணமகன் மணமகளை இனிமையான இல் வாழ்க்கையில் இணைக்க, அவர்களின் உறவினர்களும் குடும்பத்தினரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.
வடநாட்டை பொருத்தவரை, அங்கு பெரும்பாலான திருமணங்கள் மாலை அல்லது இரவு வேலைகளில் தான் நடைபெறும். அப்படிப்பட்ட ஒரு வேளையில் இந்த திருமணம் நடைபெற இருந்திருக்கிறது. அப்போது, டிஜே ஒரு திருமண பாடலை ஒளித்து இருக்கிறார். அதைக் கேட்டவுடன் தன்னை மறந்து சில நிமிடங்கள் ஒன்றாக. பின்னர் உடைந்து அழுதி இருக்கிறார். சிறிது நேரம் யோசித்து விட்டு, “எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம்” என்று திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் மணமகனின் சொந்தக்காரர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமின்றி கேட்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அது என்ன பாடல்?
அது ஒரு ரன்பீர் கபூர் படத்தின் பாடல். 2016 ஆம் ஆண்டில் வெளியான, ஏ தில் ஹே முஷ்கில் என்ற படத்தில் இடம்பெற்று இருந்த பாடலாகும். இதில் ரன்பீர் கபூருடன், அனுஷ்கா ஷர்மா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மணமகன் கேட்டு, தனது திருமணத்தை நிறுத்திய பாடலின் பெயர் “சன்னா மரியா”. இந்தப் பாடலை ஹீரோ, உனது காதலியின் திருமணத்தை சென்று பாடுவார். இதைக் கேட்டவுடன் அந்த மணமகனுக்கு தனது எக்ஸ் காதலியின் நினைவுகள் வந்திருக்கிறது. இதனால் அப்செட் ஆகி அழுத அவர், அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாமல் திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார்.
நெட்டிசன்கள் ரியாக்ஷன்..
இந்த விஷயம், தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனை கேள்விப்பட்டவர்கள், தங்களின் கருத்துகளை பலவாறாக தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர், “நல்ல வேளை, மணப்பெண் தப்பித்து விட்டார்” என்று கூற, இன்னும் சிலர் “மூவ் ஆன் ஆக முடியலன்னா ஏன்டா கல்யாணம் வரைக்கும் வர்ரீங்க?” என்று கூறியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | இந்தியா பக்கம் நிற்கும் நட்பு நாடுகள்.. போர் வெடித்தால் வெற்றி யாருக்கு?
மேலும் படிக்க | ஒரு இந்துவின் உயிரை காத்த 'கல்மா'... அது என்ன? அதை ஏன் தீவிரவாதிகள் கேட்டனர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ