India Pakistan War Latest News In Tamil: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டது. அதாவது "ட்ரோன் தாக்குதல்" குறித்து பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். எல்லை மாவட்டங்களை குறிவைத்து பாகிஸ்தான் பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு சில மாவட்டங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபின் பல பகுதிகளில் மின் தடை விதிக்கப்பட்டது.
நேற்று (வியாழக்கிழமை) மாலை வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள நகரங்களை குறிவைக்க பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட புதிய முயற்சிகளை இந்திய ஆயுதப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. குறைந்தது எட்டு ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அனைத்து விமான நிலையங்களும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மணித்தின் பல பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்தியாவின் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ZEE NEWS TAMIL பக்கத்துடன் இணைந்திருங்கள்..