)
Lunar Eclipse 2025 Red Moon Video : சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் எனவும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி கிரகணம் எனவும் கூறப்படுகிறது. பவுர்ணமி நாளில் மட்டுமே சந்திர கிரகணம் நிகழும்.
அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்தது. அதை தொடர்ந்து, 2ஆவது சந்திர கிரகணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. 2022ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் தென்பட்ட முழு சந்திர கிரகணம் இதுவாகும். இந்திய நேரப்படி இரவு 9:57 முதல் 1:27 மணி வரை கிரகணம் தெரிந்தது. அதில் முழு சந்திர கிரகணத்தை நள்ளிரவு 11:42 முதல் 12:33 மணி வரை காண முடிந்தது. மொத்தமாக 85 நிமிடங்கள் வானில் தோன்றிய இந்த‘ரத்த நிலா’ எனப்படும் பிளட் மூன், முழுமையான அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லான்டிக், ஆர்டிக் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இதை பார்க்க முடிந்தது. குறிப்பாக, இந்தியாவில் இரவு நேரம் என்பதால் பல்வேறு இடங்களில் முழு சந்திர கிரகணத்தை கோடிக்கணக்கான மக்கள் தெளிவாக கண்டு ரசித்தனர். இந்தியாவில் குறிப்பாக, டெல்லி, கவுகாத்தி, லக்னோ, பெங்களூரு, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெறும் கண்களில் தெளிவாக முழு சந்திர கிரகணதைப் பார்க்க முடிந்தது.
பார்க்க தவறிவிட்டீர்களா?
இந்த சந்திர கிரகணம், நள்ளிரவில் தெரிந்ததால், பலர் இதனை நேரில் பார்க்க தவறி விட்டனர். அப்படி தவறியவர்களுக்காகவே ஒருவர் டைம் லேப்ஸில் இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ இதோ..
5 hours timelapse of the Lunar Eclipse. This video took me a whole day to make. Enjoy! pic.twitter.com/vIRPVukEjw
— Rami Ammoun (@rami_astro) March 15, 2025
நேரில் பார்க்க ஏற்பாடு..
தமிழகத்தை பொருத்தவரை வானம் தெளிவாக இருந்த இடங்களில் தெரிந்த ரத்த நிலாவை திரளாம மக்கள் கண்டு ரசித்தனர். சில இடங்களில் மேகமூட்டம் காணப்பட்டதால் இந்நிகழ்வை தெளிவாக காண இயலவில்லை. இருப்பினும் முழு சந்திர கிரகணத்தையும் பொதுமக்கள் தெளிவாக காண வேண்டும் என்ற நோக்கில் வானியல் ஆர்வலர் குழுக்கள், சென்னை வானியல் சங்கங்கள் மாற்றும் பிர்லா கோளரங்கம் போன்றவை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
குறிப்பாக, இரவு 8:30 மணி முதல், சிறப்பு முகாம்களில் தொலைநோக்கிகள் மற்றும் நவீன வானியல் கருவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, அறிவியலாளர்கள் நேரடியாக விளக்கங்களையும் அளித்தனர். சென்னையில் திருவான்மியூர் கடற்கரை, எண்ணூர் கடற்கரை, விருகம்பாக்கம் மைதானம், கோவூர், நாவலூர், அண்ணா பல்கலைக்கழக வளாகம், ஐஐடி மெட்ராஸ், மாமல்லபுரம் கடற்கரை, பூந்தமல்லி திறந்த மைதானம் போன்ற இடங்களில் தொலைநோக்கிகளை வைத்து வானியல் குழுக்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
அடுத்த முழு சந்திர கிரகணம் 2028 டிசம்பர் 31ஆம் தேதி நடைபெறும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, நடப்பாண்டு செப்டம்பர் 21, 22ஆம் தேதிகளில் நிகழ உள்ள பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றும், தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு பசிபிக், அட்லான்டிக் மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ