)
Man Leaves 1 Crore Job For Wife : இணையத்தில் ஒருவர் தனது 1.2 கோடி சம்பளம் கொடுக்கும் வேலையை ராஜினாமா செய்ததாக கூறியிருப்பது பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? அவர் 1 கோடி சம்பளம் கொடுக்கும் வேலையை விடுவதற்கு தூண்டியது எது? இது குறித்த முழு தகவலையும் பார்ப்போம்.
சமீபத்தில் ஒருவர் Reddit தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு இணையத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதில் அவர் தான், ரூ.1.2 கோடி சம்பளம் கொடுத்த வேலையை ராஜினாமா செய்து விட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தது ஹைலைட்டாக காண்பிக்கப்பட்டிருந்தது. கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை பார்த்துக் கொள்வதற்காக அவர் தன் வேலையை விட்டிருக்கிறார். இவரது இந்த கதை ஆன்லைனில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.
அந்த நபர் தன்னை, கல்லூரி படிப்பிலிருந்து டிராப் அவுட் ஆனவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இருப்பினும், ஏழு வருட காலத்தில் தனது கெரியரை தானே வளர்த்து பெரிய இடத்திற்கு சென்று இருக்கிறார். ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் வேலை பார்த்த அவர், தனக்கு கொடுக்கப்படும் மார்க்கெட்டிங் குழுக்களை வழிநடத்தி செல்பவராக இருந்திருக்கிறார். இந்த ஏழு வருட காலத்தில் மட்டும் அவரால் ரூ.7 கோடி வரை சம்பாதிக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இவருக்கு சமீபத்தில் ரூ.1.2 கோடி சம்பளமாக கொடுக்கும் வேலை வந்திருக்கிறது. இந்த வேளையில் ஆபீஸ்க்கு அதிகமாக செல்லத் தேவையில்லை. அப்படியே செல்ல வேண்டுமென்றாலும் அந்த நிறுவனமானது இவர் வீட்டிற்கு அருகில்தான் இருந்திருக்கிறது.
இவருக்கு வேலை கிடைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தான், அவரது மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த சமயத்தில் வேலையை விட்டுவிட்டு, உடல் நலனில் கவனம் செலுத்துமாறு இவர் கூறியிருக்கிறார். ஆனால் அவரது மனைவியோ தான் வீட்டிலிருந்தே வேலை செய்வதாக கூறியிருக்கிறார். இதை பார்த்த அவர், தனக்கெடுத்து வேலையை ராஜினாமா செய்து அவர் அந்த முடிவை எடுத்ததற்கு காரணம், விட்டு வீட்டு வேலைகளை பார்ப்பதற்காகவும், மனைவியை பார்த்துக் கொள்வதற்காகவும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், தற்போது தான் நிதி நிலையில் மேன்மையில் இருப்பதால், தன்னால் ஒரு கோடி சம்பளம் கொடுக்கும் வேலையில் இருந்தும் ராஜினாமா செய்ய முடிவதாக கூறியிருக்கிறார். தனக்கு இருக்கும் அனுபவத்தையும் தொடர்புகளையும் வைத்துக்கொண்டு, தன்னால் எப்போது வேண்டுமானாலும் அதேபோல சம்பளம் கொடுக்கும் வேலை பார்க்க முடியும் என்று கூறி இருக்கிறார்.
நெட்டிசன்கள் கருத்து..
ஒரு சிலர், இந்த நபரின் செயலை பாராட்டி பேசியிருக்கின்றனர். இன்னும் சிலர், “அந்த 1 கோடி வேலை எனக்கு கிடைத்திருக்கலாமே..” என்று ஆற்றாமையில் பேசி வருகின்றனர். இன்னும் சிலர், அவரது மனைவி நல்ல படியாக குழந்தைகளை பெற்றெடுக்க வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ