)
Chevell Bus Accident: நாட்டில் சாலை விபத்துகள் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. நாள்தோறும் நடக்கும் சாலை விபத்துகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். சாலை விபத்துகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடுமையாக சாலை விதிகளையும் அரசு அமல்படுத்தி வருகிறது. இருப்பினும், சாலை விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் தற்போது தெலங்கானா மாநிலத்தில் செவெல்லாவில் நடந்துள்ளது.
ஹைதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிர்சாகுடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. செவெல்லா மண்டலத்தில் உள்ள கானாபூர் கேட் அருகே தவறான பக்கத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று எதிரே வந்த அரசுப் பேருந்து மீது பயங்கரமாக மோதியுள்ளது. சைபராபாத் கமிஷனரேட் எல்லைக்குள் நடந்த இந்த மிகவும் கோர விபத்தாக இருந்தது. விகாராபாத்-ஹைதராபாத் பாதையில் காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, லாரி ஒன்று பேருந்து மோதியதாக கூறப்படுகிறது.
இதனால், சம்பவ இடத்திலேயே பல பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 70 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே போலீசாருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுக்கள் விபத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பலரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சிலர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விபத்துக்கான காரணம் குறித்து தெலுங்கானா போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர், தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (TGSRTC) நிர்வாக இயக்குநர் நாகிரெட்டியிடம் பேசினார். தவறான பாதையில் இருந்து கற்கள் ஏற்றப்பட்ட டிப்பர் லாரி, பேருந்து மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது அதிக வேகத்தால் ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
லாரி தவறான பக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் இருந்து வந்த பயணிகள் பேருந்து மீது மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாகச் சென்று தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் . விபத்து குறித்த முழு விவரங்களையும் அவ்வப்போது தெரிவிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பேருந்து விபத்தில் காயமடைந்த அனைவரையும் உடனடியாக ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு முதல்வர் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
#WATCH | Rangareddy, Telangana | Several people lost their lives, and many others were injured in an accident between a TGSRTC bus and a truck near Khanapur Gate under Chevella police station area in Rangareddy district.
— ANI (@ANI) November 3, 2025
CM Revanth Reddy instructed the officials to immediately… pic.twitter.com/wzW6MjID2M
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ