நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பும் மத்திய அரசு?

நிர்பயா கூட்டு பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Dec 4, 2019, 05:52 PM IST
நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பும் மத்திய அரசு? title=

நிர்பயா கூட்டு பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

2012-ஆம் ஆண்டு டெல்லியை திரும்பி பார்க்க வைத்த நிர்பயா கூட்டு பலாத்கார வழக்கு தற்போது மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த கருணை மனுவை டெல்லி அரசு நிராகரிக்க கடுமையாக பரிந்துரைத்துள்ள நிலையில் மத்திய அமைச்சகம் இந்த அதிரடி முடிவினை எடுத்துள்ளது. 

இந்த வழக்கில் அரசாங்கத்தின் பரிந்துரையுடன் டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், வழக்கு தொடர்பான கோப்புகளை துணை நிலை ஆளுநர் அனில் பைஜலுக்கு அனுப்பியுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா என்ற குற்றவாளி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வினய் ஷர்மா தற்போது திகார் சிறையில் தங்கியுள்ளார், இதனிடையே மற்ற மூன்று குற்றவாளிகள் கருணை மனுவை தாக்கல் செய்ய மறுத்துவிட்டனர்.

23 வயதான நிர்பயா 2012 டிசம்பர் 16-17 தேதிகளில் இரவு நகரும் பேருந்தில் ஆறு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்பு நகரும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். சாலையில் வீசப்படுவதற்கு முன்பு அவர் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

பின்னர் நிர்பயா டிசம்பர் 29, 2012 அன்று சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார், பின்பு சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார், மற்றொருவர், சீர்திருத்த இல்லத்தில் வைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மற்ற நான்கு குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது, பின்னர் இது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News