முக்யமந்திரி யுவ சம்பல் யோஜனா திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவு இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000-வும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.4,500 வரையில் நிதி உதவி வழங்கப்படுகிறது.

வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில், ராஜஸ்தான் அரசு “முக்யமந்திரி யுவ சம்பல் யோஜனா” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி படித்தும் வேலை வாய்ப்பு பெற முடியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், பொதுப் பிரிவு இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000-வும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.4,500 வரையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை அதிகபட்சம் 2 ஆண்டுகள் அல்லது வேலை கிடைக்கும் வரை வழங்கப்படும்.

இந்த தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும் என்பது முக்கிய சிறப்பம்சமாகும். இந்த நிதியுதவியைப் பெற, விண்ணப்பதாரர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும், 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பு 35 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் குறைந்தது பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். மேலும், ஒரே குடும்பத்தில் இருந்து இருவர் மட்டுமே இந்த உதவித் தொகைக்கு தகுதி பெற முடியும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
* ஆதார் அட்டை
* முகவரி சான்று
* சாதிச் சான்றிதழ்
* வருட வருமான சான்று
* கல்வி சான்றிதழ்கள் (10ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு)
* வங்கி கணக்கு விபரம்
* மொபைல் எண் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
விண்ணப்பம் செலுத்தும் முறை முற்றிலும் ஆன்லைனில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் [https://sso.rajasthan.gov.in](https://sso.rajasthan.gov.in) என்ற இணையதளத்தில் “Job Seekers > Apply for Unemployment Allowance” என்பதைக் கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது SSO ID பெற வேண்டியது அவசியம். இந்த திட்டத்தின் கீழ், பயனாளர்கள் ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக் கழகத்தின் வழியாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளிலும் பங்கேற்க வேண்டும். இது அவர்களுக்குப் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும்.
இத்திட்டம், கல்வியால் தகுதி பெற்றும் வேலைவாய்ப்பின்றி நிதிச் சிக்கலில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு பசுமை ஒளியாக இருந்து வருகிறது. இளைஞர்களுக்கான இந்த உதவி திட்டம், அரசின் சமூக நலத் திட்டங்களில் முக்கியமானதொன்றாக மாறியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ