NEET UG 2025 Result: 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. நீட் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

NEET UG 2025 Result: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 4ஆம் தேதி ஒரு கட்டமாக நடத்தப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட 2025 நீட் தேர்வில் சுமார் 20.8 லட்சம் பேர் தேர்வெழுதி உள்ளனர்.
NEET UG 2025 Result: தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான நீர் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமை (NTA) இன்று வெளியிட்டுள்ளது. neet.nta.nic.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று நீட் தேர்வு முடிவுகளை சரிபார்த்தும்கொள்ளலலாம், தரவிறக்கமும் செய்துகொள்ளலாம். neet.nta.nic.in. என்ற இணையதளத்திற்கு சென்று உங்களின் விவரங்களை உள்ளீடு செய்து முடிவுகளை சரிபார்த்துக்கொள்ளலாம், Answer Key அதிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 2025 நீட் தேர்வு முடிவுகளோடு, இறுதி Answer Key, கட் ஆப் மதிப்பெண்கள், அதிக மதிப்பெண்களை பெற்றவர்களின் பெயர்கள் மற்றும் பிற தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
NEET UG 2025 Result: இறுதி Answer Key
நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே, தற்காலிக Answer Key-ஐ தேசிய தேர்வு மையம் வெளியிட்டது. அதில் நீங்கள் ஏதாவது கேள்விக்கான விடைக்கு நீங்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறீர்கள் என்றால், ஆன்லைன் ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.200 செலுத்தி ஆட்சேபனையை பதிவு செய்யலாம். இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பில், "குறிப்பிட்ட காலத்திற்குள், சவால் செய்யப்பட்ட ஒவ்வொரு கேள்வி - பதிலுக்கும் ரூ.200 திரும்பப்பெற முடியாத கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம், தற்காலிக விடைக்குறிப்புக்கு எதிராக ஆன்லைனிலேயே ஆட்சேபனை செய்ய தேர்வு எழுதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்" என தெரிவித்திருந்தது. இதன்மூலம், மாணவர்கள் தங்களின் அனைத்து சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள இயலும். அதன் பின்னர், பாட வல்லுநர்கள் மாணவர்களின் இந்த ஆட்சேபனைகளை மதிப்பாய்வு செய்வார்கள். அவற்றை சரிசெய்து இறுதி Answer Key வெளியிடப்பட்டது.
NEET UG 2025 Result: ராஜஸ்தான் மாணவர் முதலிடம்
NEET UG 2025 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கின் போது கண்டிப்பாக மதிப்பெண் அட்டையின் நகல் தேவைப்படும். அகில் இந்திய ஒதுக்கீட்டில் (AIQ) தகுதிபெற்றிருக்கும் மாணவர்கள், மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) நடத்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள். மேலும் குறிப்பிட்ட மாநிலங்களால் ஏற்பாடு செய்யப்படும் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் என்ற மாணவர் 99.99995476 மதிப்பெண்களை பெற்று அகில இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளார். மேலும் டாப் 10 பட்டியலில் 9 பேரும் ஆண்கள்தான். டெல்லியை சேர்ந்த அவிகா அகர்வால் 5வது இடத்தை பிடித்திருந்தார், இவர் மட்டுமே அந்த பட்டியலில் பெண் ஆவார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ