)
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய பிறகு, இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கும் நோக்கில் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. இருப்பினும், இதனால் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) இதனால், ரூ. 1,240 கோடி (PKR 4.1 பில்லியன்) இழப்பை ஏற்படுத்தியதால், இஸ்லாமாபாத் பெரும் நிதி இழப்பைச் சந்தித்துள்ளதாக கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை தேசிய சட்டமன்றத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இழப்புகளின் எண்ணிக்கையை டான் பத்திர்க்கை தெரிவித்துள்ளது. மேலும், அறிக்கையின்படி, இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் வான்வழிப் பறப்பு அனுமதியை இஸ்லாமாபாத் திரும்பப் பெற்ற ஏப்ரல் 24 முதல் இந்த தடை அமலுக்கு வந்தது.
வான்வெளி மூடல் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை வான் பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதிலிருந்து பெரும் PAA-வின் வருவாய் சரிந்ததாக டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இது தினசரி 100-150 இந்திய விமானங்கள், வான் பரப்பை தவிர்த்ததால், இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் விமான போக்குவரத்தை கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைத்தது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் நிதி இழப்புகளை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அனைத்து இந்திய விமானங்களுக்கும் வான்வெளியை மூடுவதற்கான முடிவை நியாயப்படுத்த முயன்றது. மேலும், "பொருளாதாரக் கருத்தில் கொள்ளாமல் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது" என்றும் கூறியது. விமானப்படை விமானங்களுக்கு நோட்டீஸ் (NOTAMs) வெளியிட்ட நடவடிக்கைகள் "மூலோபாய மற்றும் இராஜதந்திர" காரணங்களுக்கானது என்றும் அதிகாரிகள் கூறினர்.
பாகிஸ்தான் அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில், வான பரப்பை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் PAA நிறுவனத்தின் சராசரி வருவாய் 508,000 டாலர்களாக இருந்தது, இது 2025 ஆம் ஆண்டில் 760,000 டாலர்களாக இருந்தது. ஆனால், இப்போது வருமானத்தை விட மிக அதிகமாக செலவாகிறது என்று டான் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் பாகிஸ்தானின் வான்வெளி திறந்திருக்கும், மேலும் இந்தத் தடை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் கடைசி வாரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற சர்வதேச வழித்தடங்களில் இந்திய விமான நிறுவன சேவை எதுவும் பாதிக்கப்படாமல் தொடர்கின்றன, அதே நேரத்தில் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கு இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 25 இந்திய குடிமக்களையும் ஒரு நேபாள குடிமகனையும் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது. இருப்பினும், பின்னர் அது இந்த சம்பவத்திலிருந்து தன்னைத்தானே விலக்கிக் கொண்டது.
இதன் பின்னர், புது தில்லி இஸ்லாமாபாத்திற்கு எதிராக பல இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது. மேலும் வான்வெளி மூடலும் அதன் ஒரு பகுதியாகும். ஏப்ரல் 30 முதல் பாகிஸ்தானால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட அனைத்து விமானங்களும், இராணுவ விமானங்கள் உட்பட, இந்திய வான்வெளிக்குள் நுழைவதை இந்தியா தடை செய்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ