பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைய தடை.. மத்திய அரசு அதிரடி!

பாகிஸ்தானின் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்தவும் பாகிஸ்தானின் கப்பல்கள் இந்தியாவுக்குள் நுழையவும் தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Apr 29, 2025, 02:49 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்
  • இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் நுழைய தடை என தகவல்
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைய தடை.. மத்திய அரசு அதிரடி!

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் சுற்றுலா தளத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தது மட்டுமல்லாமல் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர். பாகிஸ்தானின் வாழ்வாதாரமான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்து சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு திறப்பதையும் நிறுத்தியது இந்திய மத்திய அரசு. அதேபோல் அட்டாரி - வாகா எல்லையை மூடியது. 

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும், இந்தியாவின் விமானங்கள் தங்களது வான்பரப்பில் நுழைய தடை விதித்தது. அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றத்தை தணிக்கும் சிம்லா ஒப்பந்தத்தை கைவிடுவதாகவும் பாகிஸ்தான் கூறியது. எல்லை பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமும் நடந்து வருகிறது. எனவே இரு நாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கலாம் என்ற பதற்றம் நிலவி வருகிறது. 

இந்த நிலையில், பாகிஸ்தானின் விமானங்கள், இந்திய வான்பரப்பில் நுழைய தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் அந்நாட்டின் கப்பல்கள் அனைத்தும் இந்திய துறைமுகங்களில் நுழையவும் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இச்சூழலில் நாளை (ஏப்ரல் 30) டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. 

மேலும் படிங்க: Pahalgam News: காஷ்மீரின் 48 சுற்றுலா தலங்கள் மூடல்... அரசு அதிரடி - முழு பின்னணி

மேலும் படிங்க: ஆளே மாறிப்போன கும்பமேளா மோனலிசா! முன்ன விட அழகா இருக்காங்களே..வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News