சுதேசி இயக்கமாக வெற்றி அடைந்துள்ள பதஞ்சலி... பெருகும் வேலைவாய்ப்புகள்

பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தலைமையில் இயங்கும் பதஞ்சலி,  சுதேசி இயக்கமாக, உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து, வேலைவாய்ப்பை வழங்குகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2025, 12:34 PM IST
  • பதஞ்சலி நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
  • மலிவான, தரமான உள்நாட்டு பொருட்கள் மூலம் அதிகரிக்கும் விற்பனை.
  • பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய பங்காற்றும் பதஞ்சலி.
சுதேசி இயக்கமாக வெற்றி அடைந்துள்ள பதஞ்சலி... பெருகும் வேலைவாய்ப்புகள்

இன்று உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இதில் நாட்டின் பல நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை கொடுக்கின்றன. குறிப்பாக சுதேசி இயக்கமாக, உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து, உள்நாட்டிலேயே தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்து, மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் மிக முக்கியமானவை. இதன் காரணமாக, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் சந்தைகளை சென்றடைகின்றன. 

Add Zee News as a Preferred Source

பதஞ்சலி சுதேசி இயக்கத்தை புதிய உச்சதிற்கு எடுத்துச் செல்கிறது

சுதேசி இயக்கம் என்பது நமது நாட்டை சார்ந்த விஷயங்களை மேம்படுத்துவதாகும். இதில் பதஞ்சலி நிறுவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று, பதஞ்சலி இந்த இயக்கத்தை புதிய உச்சதிற்கு எடுத்துச் செல்கிறது. குறிப்பாக ஆயுர்வேத மற்றும் உள்நாட்டு பொருட்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தலைமையில் இயங்கும் பதஞ்சலி, இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மேலும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் துறையில் இது ஒரு பெரிய பெயரைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன.

FMCG நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பதஞ்சலி

பதஞ்சலியின் வருவாய் மற்றும் லாபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றான பதஞ்சலி, அதன் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. அதன் தனித்துவமான வணிக மாதிரி மற்றும் குறைந்த விலைகள் காரணமாக, இது FMCG மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகளின் சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.

பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய பங்காற்றும் பதஞ்சலி

பதஞ்சலியின் பொருளாதார பங்களிப்பு மிகப் பெரியது. 2023-24 ஆம் ஆண்டில், பதஞ்சலி ஆயுர்வேதத்தின் வருமானம் ரூ.9,335.32 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 23.15% அதிகம். அதே நேரத்தில், பதஞ்சலி உணவு நிறுவனத்தின் வருமானம் 2023 ஆம் ஆண்டில் ரூ.31,800 கோடியாக இருந்தது. இந்த நிறுவனம் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

வேலை வாய்ப்புகளை அதிக அளவில் ஏற்படுத்தும் பதஞ்சலி

புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் பதஞ்சலி முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களிடம் 10,000 சுகாதார மையங்கள், 4,500 விநியோகஸ்தர்கள் உள்ளனர், மேலும் 6,38,735 கிராமங்களைச் சென்றடைகிறார்கள். இதன் காரணமாக கிராமங்களின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. மேலும், அவர்கள் தங்கள் வரம்பை 10 லட்சம் மளிகைக் கடைகளாக விரிவுபடுத்தியுள்ளனர். மேலும் நவீன வர்த்தகக் கடைகளிலும் உள்ளனர். இதன் காரணமாக சிறு கடைக்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

மலிவான, தரமான உள்நாட்டு பொருட்கள் மூலம் அதிகரிக்கும் விற்பனை

பதஞ்சலி தயாரிப்புகளான நெல்லிக்காய் சாறு, கடுகு எண்ணெய், பசு நெய் மற்றும் பல அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் விலை குறைவாக உள்ளது என்பதால் சிக்கனமானவை. ஆயுர்வேத பொருட்களான இவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது. பெரும்பாலான தயாரிப்புகள் போட்டியிடும் நிறுவனங்களை விட மலிவானவை, தரமானவை.  சாமானிய மக்கள் மத்தியில், குறிப்பாக கிராமப்புறங்களில் குறைவான விலைகள் மற்றும் சுதேசி முறையீடு (இந்தியாவில் தயாரிக்கப்பட்டது) சில்லறை விற்பனையில் வெற்றி பெற வைக்கிறது.

நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமை

நமது பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமான ஆயுர்வேதத்தில் கவனம் செலுத்துவதால் பதஞ்சலி நமது கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, நிதி ரீதியாக நலிவடைந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவுவதும் இதன் நோக்கம் என்று நிறுவனம் நம்புகிறது. இது நாட்டின் பெருமையை அதிகரிப்பதோடு, சுயசார்புடையவர்களாக மாறுவதற்கான உத்வேகத்தையும் அளிக்கிறது.

பதஞ்சலி சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவுகிறது

பதஞ்சலி பல சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவியுள்ளது. இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களை உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது. இது கிராமங்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. இதன் மூலம், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதோடு, அவர்களின் வருமானமும் அதிகரிக்கிறது. பதஞ்சலி நிறுவனம் நொய்டா, நாக்பூர் மற்றும் இந்தூர் போன்ற பெரிய நகரங்களில் புதிய தொழிற்சாலைகளை அமைத்து தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. இது மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.

மேலும் படிக்க | இந்தியாவில் சுகாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பதஞ்சலி.. எவ்வாறு?

மேலும் படிக்க | இயற்கை சிகிச்சைகளின் மீது மக்களின் நம்பிக்கையை... பதஞ்சலி எவ்வாறு அதிகரிக்கிறது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News