“தீவிரவாதிகளை வேட்டையாடுவோம்” பல்ஹாம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..

PM Narendra Modi About Pahalgam Terrorist Attack : பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரம், இதோ. 

Written by - Yuvashree | Last Updated : Apr 24, 2025, 01:48 PM IST
  • நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல்
  • மோடி கொடுத்த வார்னிங்
  • அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் என சூளுரை
“தீவிரவாதிகளை வேட்டையாடுவோம்” பல்ஹாம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..

PM Narendra Modi About Pahalgam Terrorist Attack : நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல், உலக மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி சமீபத்திய கூட்டம் ஒன்றில் பேசியிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பஹல்காம் தாக்குதல்:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளால் 25க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அனால் இந்தியா, இந்த தாக்குதல் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தேடப்பட்டு வருகின்றனர். உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் இந்த சம்பவம், அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, அரசு முறை பயணமாக துபாய் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அந்த பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார். 

பிரதமர் மோடி பேச்சு:

பஹல்காம் தாக்குதல் குறித்து மோடி முதன்முறையாக பிஹாரில் பேசியிருக்கிறார். அப்போது, இந்தியாவின் சக்தி தீவிரவாதத்தால் உடைந்திருப்பதாக கூறிய அவர், இதற்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் தீவிரவாதிகள் யார் யார் என வேட்டையாடப்பட்டு, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து, இந்த கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அவர்களின் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு தண்டனைக்கு உட்கொள்ளப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.  இந்தியா, இந்த பயங்கரவாதிகளை சும்மா விடாது என்று கூறியிருந்த மோடி, அவர்கள் உலகின் எல்லை வரை சென்றாலும் அவர்களை வேட்டையாடுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: இந்துக்கள் மட்டும் கொல்லப்பட்டனரா? உண்மை இதுதான்!

மேலும் படிக்க | பாகிஸ்தான் ராணுவ தளபதியும், பின்லேடனும் ஒண்ணு தான்... Ex அமெரிக்க அதிகாரி தடாலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News