PM Narendra Modi Vizag: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி ஆற்றிய உரையை இங்கு விரிவாக பார்க்கலாம்.

PM Modi Vizag Event: 11வது சர்வதேச யோகா தினம் (International Yoga Day 2025) இன்று (ஜூன் 21) இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூடி, யோகாசனங்களை மேற்கொண்டு யோகாவின் முக்கியத்துவம் குறித்து பறைசாற்றி வருகின்றனர். 2014ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச தினம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 11வது சர்வதேச யோகா தினத்தின் தேசிய கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்திவைத்தார். இந்த நிகழ்ச்சியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் பங்கேற்றார். மேலும் இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் இணைந்து பிரதமர் மோடியும் யோகாசனங்களை மேற்கொண்டார்.
Andhra Pradesh: A large number of people join PM Narendra Modi in Andhra Pradesh in celebrating #InternationalDayofYoga2025, in Visakhapatnam.
— ANI (@ANI) June 21, 2025
(Pics Source: ANI/DD News) pic.twitter.com/iejYy754JD
PM Modi Vizag Event: 'யோகா தான் Pause பட்டன்'
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மோதல்கள் நிறைந்த தற்போதைய உலகில் யோகாவே அமைதியை நிலைநாட்டும் என்றும் அனைத்திற்கும் யோகாவே Pasue Button ஆக இருக்கும் என்றும் பேசியுள்ளார்.
சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் மேலும் பேசிய பிரதமர் மோடி, "சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, முழு உலகமே யோகா பயிற்சி செய்கிறது. யோகா என்றால் இணைப்பது என்று பொருள், மேலும் யோகா முழு உலகத்தையும் எவ்வாறு இணைத்துள்ளது என்பதைப் பார்ப்பதற்கே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
#WATCH | Visakhapatnam | #InternationalDayofYoga2025 | PM Narendra Modi says, "The theme of this year's International Day of Yoga is 'Yoga For One Earth, For One Health'. This theme reflects a deep truth: the health of every entity on Earth is interconnected. Human well-being… pic.twitter.com/Ww4zQFSWmf
— ANI (@ANI) June 21, 2025
PM Modi Vizag Event: 'யோகா அனைத்திற்கும் அப்பாற்பட்டது'
யோகா எல்லைகள், வயது, திறமை என அனைத்திற்கும் அப்பாற்பட்டது. யோகா உலகை ஒன்றிணைத்துள்ளது. மன அமைதியை உலகளாவிய கொள்கையாக்குவதன் மூலம் இந்த யோகா தினம் மனிதநேயம் 2.0 இன் தொடக்கத்தை குறிக்கட்டும். கோடிக்கணக்கான மக்கள் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது நம்மை ஒன்றோடொன்று இணைக்கிறது. ஓர் உலகம், ஓர் ஆரோக்கியத்திற்கானது யோகா. யோகா நம்மை 'நான்' என்பதில் இருந்து 'நாம்' என்றாக்கும். இந்தியா உலகிற்கு பெரும் ஆறுதலை வழங்குகிறது" என்றார்.
கடந்த பத்தாண்டுகளில் யோகாவின் உலகளாவிய பயணம் குறித்து பிரதமர் மோடி பேசினார். ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அங்கீகரிக்க, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா முன்மொழிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தையும் பிரதமர் மோடி நினைவுக்கூர்ந்து பேசினார். "மிகக் குறுகிய காலத்தில், 175 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இன்றைய உலகில் இத்தகைய ஒற்றுமையும் ஆதரவும் உண்மையிலேயே அசாதாரணமானது" என்றார்.
நம் மாற்றுத்திறனாளி நண்பர்கள் பிரெய்லி முறையில் யோகா சாஸ்திரங்களைப் படிப்பதையும், விஞ்ஞானிகள் விண்வெளியில் யோகா பயிற்சி செய்வதையும், கிராமங்கள் முழுவதும் யோகா ஒலிம்பியாட்களில் இளைஞர்கள் பங்கேற்பதையும் பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. கடற்படைக் கப்பல்கள், எவரெஸ்ட் சிகரம் மற்றும் பரந்த கடல்களுக்கு அப்பால் நடைபெறும் தனித்துவமான யோகா தின கொண்டாட்டங்களையும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
#WATCH | Indian Navy personnel on board an INS (Indian Naval Ship) off the Visakhapatnam coast in Andhra Pradesh join in #InternationalDayofYoga2025 celebrations. PM Narendra Modi is leading the nation in performing Yoga today, from Visakhapatnam.
— ANI (@ANI) June 21, 2025
Over 11,000 naval personnel and… pic.twitter.com/RnEIeicBl8
விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற யோகா தின கொண்டாட்டம் நடைபெற்ற அதே நேரத்தில், விசாகப்பட்டினம் கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் இந்திய கடற்படை வீரர்கள் 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். கிழக்கு கடற்படை கமாண்ட் பிரிவைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பிரதமருடன் பிரமாண்டமான காலை யோகா அமர்வில் பங்கேற்றனர். விசாகப்பட்டினத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கடற்படைக் கப்பல்களிலும் யோகா பயிற்சி செய்யப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ