)
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவருக்கு வயது 34. இவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். மேலும், இவரது தந்தை எச்.டி. ரேவண்ணாவும் முன்னாள் அமைச்சர் ஆவார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. அவரது வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த 47 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து முன்னாள் எம். பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மே 31ஆம் தேதியன்று பிரஜ்வால் எஸ்ஐடி சிறப்பு விசாரணை குழுவால் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கடந்தாண்டு இறுதியில், 1,652 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், விசாரணை முடிவடைந்து, பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜானன் அறிவித்தார்.
இன்று (ஆக. 02) பிரஜ்வால் ரேவண்ணாவுக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்தும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ