)
Puch AI Internship Offer 2 Lakhs Per Month : தற்போதைய உலகில், படிப்பு அதிகமாக பெருகி இருந்தாலும், வேலை கிடைப்பது என்பது பலருக்கும் குதிரைக்கொம்பாகத்தான் இருந்து வருகிறது. இதனால், ஒரு பட்டப்படிப்பு போதாது என்ற நிலை ஏற்பட்டு, பலரும் 2 டிகிரி படிக்கின்றனர். அனைத்து பாேட்டிகளிலும் முன்னேறி, எப்படியாவது ஒரு வேலையை பிடித்துக்கொண்டால், அங்கும் வேலை நீக்க பிரச்சனை என்று ஒன்று வருகிறது. அதையும் தாண்டி வந்தால், இப்போது புதிதாக விஸ்வரூபம் எடுத்து வரும் AI-ஆல் வேலை போய்விடுமோ என்கிற பயமும் எழுந்துள்ளது. ஆனால், இங்கு ஒரு நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்கு பயிற்சி வேலைக்கு (Internship) வருபவர்களுக்கும், பகுதி நேர வேலைக்கு வருபவர்களுக்கும் மாதம் ரூ.1-2 லட்சம் வழங்குவதாக கூறியிருக்கிறது. இது குறித்த முழு தகவல், இதோ.
பகுதி நேர வேலைக்கு 2 லட்சம் சம்பளம்!
Puch AI என்கிற நிறுவனம்தான் இப்படியொரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. இதன் இணை நிறுவனர் சித்தார்த் பாட்டியா என்பவர் LinkedIn தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவுதான், ஊரே இது குறித்து பேசுவதற்கு காரணமாக மாறியிருக்கிறது.
தனது ஸ்டார்ட் அப் AI-க்கு 2 பயிற்சி வேலை செய்பவர்கள் (Interns) தேவை என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஒருவர் AI Engineer ஆக வேலை பார்க்க வேண்டும் என்றும், இன்னொருவர் நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்துக்கொள்ளும் Growth Magician ஆக இருக்க வேண்டும் என்றும் கூறினார். இதில் முன்னர் கூறிய இன்ஜினியருக்கு முழு நேர இண்டர்ன்ஷிப், இரண்டாமவருக்கு பகுதி நேர அல்லது முழு நேர இண்டர்ன்ஷிப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தில், வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு Salary அதாவது சம்பளம் என்று பெயர். ஆனால், பயிற்சி வேலைக்கு வருபவர்களுக்கு, கற்றல் முறையும் இருக்கும், அவர்கள் பார்க்கும் வேலைக்கான ஊதியமும் இருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் Stipend என்று பெயர். அப்படி, இந்த நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் வந்தால், அவர்களுக்கு மாதம் ரூ.1 முதல் 2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையில் இருக்கும் விஷயங்கள்..
இந்த வேலை, Remote என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாம் இருக்கும் இடத்தில் இருந்தே வேலை பார்க்கலாம். இதற்கு பட்டப்படிப்பு தேவை இல்லையாம். கடந்த மாதம் பள்ளியில் படிக்கும் ஒருவரை எடுத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உண்மையா? வைரலாகும் முயற்சியா?
ஒரு சிலர், LinkedIn தளத்தில் “வேலைக்கு ஆள் தேவை” என்று பதிவிடுவதுண்டு. ஆனால், கடைசியில் அவர்கள் விண்ணப்பித்த யாரையுமே வேலைக்கு எடுத்திருக்க மாட்டார்கள். காரணம், அது அவர்களின் LinkedIn கணக்கை பிரபலப்படுத்த மேற்கொண்ட முயற்சியாக இருக்கும். இந்த பதிவில், “உங்களுக்கு இதில் விருப்பம் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள். யாரேனும் தெரிந்திருந்தால் அவர்களை டேக் செய்யுங்கள். அவர்கள் இந்த வேலைக்கு செலக்ட் செய்யப்பட்டால் உங்களுக்கு iPhone பரிசு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் இந்த பதிவை வெளியிட்டதில் இருந்து ஊரே இவர்களை பற்றிதான் பேசி வருகிறது. எனவே, இது அவர்கள் வேண்டுமென்றே வைரலாக வேண்டும் என்பதற்காக செய்த விஷயமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ