Patanjali Yoga: இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், யோகா வெறும் உடல் பயிற்சிக்கானது இல்லை, அதையும் தாண்டி பரிணமித்துள்ளது எனலாம். இது மன அமைதி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை அதிகரிக்க உதவும் ஒரு முழுமையான பயிற்சியாக மக்களிடையே மாறியுள்ளது. அனைத்தும் வேகமாக இயங்க தொடங்கியிருக்கும் இந்த உலகில், மன அழுத்தம் மற்றும் பதற்றம் பொதுவானதாகிவிட்டது.
யோகா ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஒரு பயனுள்ள தீர்வை வழங்குகிறது. ஒரு காலத்தில் ஒரு பண்டைய பாரம்பரியமாகக் கருதப்பட்ட யோகா இப்போது ஆரோக்கியமான உடலைப் பராமரிப்பதில் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. மேலும் உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் யோகாவை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இன்று யோகா பெரும் செல்வாக்கை பெற்றிருக்கிறது. இதற்கு பெரும் பங்களிப்பை அளிப்பது பதஞ்சலி. இது பாபா ராம்தேவ்விற்கு சொந்தமான ஆயுர்வேத தயாரிப்புகள் மற்றும் இயற்கை வைத்தியங்களை ஊக்குவிக்கும் நிறுவனமானமாகும். கடந்த சில ஆண்டுகளாக, உடல், மன மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்திற்கான யோகாவை ஊக்குவிப்பதில் பதஞ்சலி குறிப்பிடத்தக்க பங்கை செலுத்தி வருகிறது.
மேலும் படிக்க | பதஞ்சலி மருந்துகள்: பல தலைமுறைகளாக ஆரோக்கியத்தை காக்கும் நம்பகமான தூண்கள்
பதஞ்சலி யோகா உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு இடையிலான சமநிலையில் கவனம் செலுத்துகிறது. இது எட்டு அத்தியாவசிய கூறுகளை உள்ளடக்கிய அஷ்டாங்க யோகாவை வலியுறுத்துகிறது. அவற்றை இங்கு வரிசையாக காணலாம்.
1. யம (நெறிகள்)
2. நியமா (தனிப்பட்ட கட்டுப்பாடு)
3. ஆசனம் (உடல் நிலைகள்)
4. பிராணாயாம் (மூச்சு கட்டுப்பாடு)
5. ப்ரத்யாஹாரம் (அறிவுறுத்தல்களை காப்பாற்றுவது)
6. தாரணா (தீவிர கவனம்)
7. தியானம் (மேடிடேஷன்)
8. சமாதி (ஆன்மிக அறிவு)
பதஞ்சலி யோகாவால் லட்சக்கணக்கான மக்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள்?
பதஞ்சலி யோகா என்பது உடல் தகுதி மட்டுமல்ல; மன அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறது. யோகா தனிநபர்கள் தங்களை தாங்களே நன்கு புரிந்துகொள்ளவும், உள் அமைதியை அடையவும் உதவுகிறது. இது மன அழுத்தம் இல்லாத மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. இதனால்தான் பதஞ்சலி யோகாவின் புகழ் வேகமாக வளர்ந்து வருகிறது.
பதஞ்சலியின் யோகா அறக்கட்டளை
யோகா நகரம் என்றழைக்கப்படும் ரிஷிகேஷ் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பதஞ்சலி ஹத யோகா அறக்கட்டளை, பண்டைய யோகா பயிற்சிகளை இன்றைய வாழ்க்கை முறையுடன் இரண்டரக் கலந்து செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை ஹத யோகா, அஷ்டாங்க யோகா, குண்டலினி யோகா மற்றும் ஹீலிங் (குணப்படுத்தும்) யோகா குறித்த சிறப்பு அமர்வுகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை வழங்குகிறது.
இந்த அமர்வுகள் அனைத்து வயதினருக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக, ஹீலிங் யோகா மன அழுத்தம், பதற்றம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது. இந்த பயிற்சியில் யோகா ஆசனங்கள், சுவாச நுட்பங்கள், தியானம் மற்றும் தளர்வு ஆகியவை அடங்கும்.
கூடுதலாக, இந்த அறக்கட்டளையில் ஆயுர்வேதம் யோகாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சரியான உணவுமுறை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மூலிகை சிகிச்சைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்குகிறார்கள், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பதஞ்சலி யோகா, நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது, உடல் வலிமை, மன அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இது சமநிலையான வாழ்க்கையைத் தேடும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு பிரபலமான தேர்வாக அமைகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









