பள்ளி மாணவனிடம், அவனது வகுப்பு ஆசிரியை “சினிமாவிற்கு போகலாமா?” என்று கேட்ட வாட்ஸ் ஆப் பேச்சுவார்த்தை இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு ஆசிரியை தனது மாணவனை சினிமாவிற்கு அழைத்த விவகாரம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நலொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு ஆசிரியரே இப்படி தனது மாணவரிடம் நடந்து கொள்ளலாமா என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது. அந்த ஆசிரியரின் உரையாடலையும், இந்த சம்பவம் குறித்த விவரத்தையும் இங்கு பார்ப்போம்.
ஆசிரியை செய்த செயல்..!
பள்ளி மாணவன் ஒருவனிடம், அவனது வகுப்பு ஆசிரியை “சினிமாவிற்கு போகலாமா?” என்று கேட்டிருக்கிறார். அந்த மாணவருக்கு 18 வயதே ஆகியிருக்கிறது. தன்னை சினிமாவிற்கு அழைத்திருந்த அந்த ஆசிரியரின் வாட்ஸ் ஆப் பதிவுகளை அந்த மாணவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து நெட்டிசன்கள் அனைவரும் கோபமடைந்திருக்கின்றனர்.
ரெடிட் பதிவு:
ரெடிட் எனும் சமுக வலைதளத்தில்தான் அந்த பள்ளி மாணவன் இந்த பதிவை வெளியிட்டிருக்கிறான். மாணவரிடம் அந்த ஆசிரியை,”நாளைக்கு உனக்கு ஒரே ஒரு வகுப்பு மட்டும்தானே இருக்கும். படம் பார்க்க விருப்பம் இருந்தால் சொல். நானும் அரைநாள் லீவ் எடுக்கிறேன்” என்று கேட்டிருக்கிறார். ஆசிரியையின் இந்த மெசேஜை பார்த்து அதிர்ந்த மானவன், மேலும் தர்ம சங்கடங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, இந்த சூழலை அழகாக கையாண்டு இருக்கிறார். “மேம், என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு என் நண்பர்களுடன் வேறு ப்ளான் இருக்கிறது. இது குறித்து அப்புறம் பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
மாணவன் பொறுமையாக இந்த விஷயத்தை சொல்லியும், அந்த ஆசிரியை “அது கெடக்கட்டும் நாம போலாம்” என்பது போல அழைத்திருக்கிறார். உன் முடிவை மறு பரிசீலனை செய் என்றும் கூரியிருக்கிறார். அந்த மாணவன், திட்டவட்டமாக தன் முடிவை சொல்லியிருக்கிறார். “மன்னித்துக்கொள்ளுங்கள் மேம், ஏற்கனவே திட்டமிட்டது இது” என்று கூறியதுடன் உங்களுடன் அவுட்டிங் செல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.
அந்த மாணவர், ரெடிட்டில் இதை பதிவிட்டதொடு தனக்கு 18 வயதுதான் ஆவதாகவும், அந்த ஆசிரியைக்கு 28-29 வயது வரை இருக்கும் என நினைப்பதாகவும் கூறியிருக்கிறார். இதில், பாலினங்கள் மட்டும் மாறியிருந்தால் இப்படி தன்னை கிண்டல் செய்வீர்களா? என்றும் கேட்டிருக்கிறார்.
கோபம் கொண்ட நெட்டிசன்கள்:
இணையத்தில், எதை பதிவிட்டாலும் வைரலாவதை தொடர்ந்து, தற்போது இந்த மாணவனின் பதிவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஒரு சிலர், அந்த பள்ளி மாணவர் உடனடியாக இதனை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இது போன்ற ஆசிரியர்கள், ஆசிரியர் பணியில் இருக்கவே தகுதியற்றவர்கள் என்றும் கூறியிருக்கிறார். அது மட்டுமன்றி, மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஒருவரே இப்படியொரு செயலை செய்வது அந்த பதவியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி வருகின்றனர். ஒரு சிலர், அந்த மாணவன் இந்த சூழலை கையாண்ட விதத்தை பாராட்டி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ