)
கொல்கத்தாவில் இருக்கும் சுரேந்திரநாத் கல்லூரியின் கல்லூரி யூனியன் அறையில் இரண்டு பணப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பணப்பெட்டிகளை திறந்த போதுதான், அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.
கொல்கத்தாவின் சுரேந்திரநாத் கல்லூரில், மழைகாலத்திற்கு முன்பாக நடைப்பெறும் தூய்மை பணிகள் வழக்கம் போல ஆரம்பித்தன. இதில், அக்கல்லூரி யூனியன் அறை ஒன்றில் இருக்கும் பீரோவில் இருந்து இரண்டு பழைய சூட்கேஸ்கள் கிடைத்துள்ளது.
Suitcases full of cash recovered from TMC Chatra Parishad office in Surendranath College.
— Sunny Raj (@SunnyRajBJP) June 2, 2026
Under TMC, campuses was turned into collection centres instead of centres of education.
pic.twitter.com/7eMGQ94tm2
அந்த சூட்கேஸுகளை திறந்தால், அதில் ரூ.100, ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதில் எந்த நோட்டுமே தேரும் வகையில் இல்லை. அனைத்தும் கரையானால் அரிக்கப்பட்டு, மொத்தமாக பாழ்பட்டு போன நிலையில் இருந்தன.
இது குறித்து முச்சிபாரா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், அவர்கள் அந்த சூட்கேசை கைப்பற்றியதோடு, அதிலிருந்து சில டாக்குமெண்ட்களையும் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த டாக்குமெண்ட்களில் கூறப்பட்டிருப்பது என்ன, இந்த பணம் எத்தனை நாட்களாக இங்கு கிடக்கிறது, இந்த அறையை உபயோகித்தது யார் என்பது குறித்த விசாரணையில் இறங்கி இருக்கின்றனர். இந்த சூட்கேஸ், கல்லூரி அதிகாரிகள் முன்பு, மாலை ஷிஃப்ட் கல்லூரி மாணவர்களால் திறக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பணம் கிடைத்து, அது சம்பந்தமான டாக்குமெண்ட்கள் கிடைத்திருந்தாலும், இது யாருக்கு உரியது என்பது இன்னும் தெரியவில்லை.
இந்தச் சம்பவம் உடனடியாக அரசியல் சர்ச்சையாகவும் மாறியிருக்கிறது. பாஜக எம்.எல்.ஏ. சஜல் கோஷ், இது குறித்து பதிவிட்டு ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டி, முழுமையான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்தார். இவ்வளவு பெரிய தொகை பணம் யாருடைய கவனத்திற்கும் வராமல் கல்லூரி மாணவர் சங்க அறைக்குள் எப்படி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கல்லூரி வளாகத்திற்குள் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள பெயர்கள் மற்றும் முகவரிகளை வைத்துப் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கரையான்கள் பணத்தைத் தின்றிருந்தாலும், இந்த மர்மத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளைச் சட்டத்தின் முன் கொண்டு வர போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். இது சாதாரண மாணவர் அரசியல் பகையா அல்லது பெரிய அளவிலான ஊழலா என்பது போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும்
2 பெட்டிகளில் இருந்த அந்த பணத்தின் மதிப்பு, ரூ.1 லட்சம். 10 ரூபாய் நோட்டை கரையான் அரித்திருந்தாலே நம் ஆட்களுக்கு மனம் பாடாய் பதைக்கும். இப்படி, ரூ.1 லட்சம் கரையான்களுக்கு இரையாகி இருப்பது பலபேருக்கு ஆற்றாமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நெட்சின்கள் பலர், “எலே..என் வயிறு எரியுதுலே..” என்று தங்கள் பாணியில் அந்த பணம் இப்படி கரையான்களுக்கு இரையானது தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.