)
Sabarimalai Virtual Que Booking: சபரிமலை கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களுக்கான முன்பதிவு இன்று (நவ. 1) முதல் தொடங்குகிறது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் இந்த முன்பதிவு நடைபெறுகிறது. ஆன்லைனில் 70 ஆயிரம் பேர், ஆப்லைனின் 20 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம் வாரியம் முடிவெடுத்துள்ளது.
சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை (Sabarimalai Mandala and Makara Vilakku Pooja) தினங்களில் கோவில் நடை திறப்பு இருக்கும். கார்த்திகை மாதத்தில் தொடங்கும் இந்த மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, விரதம் முடிவில் சபரிமலை கோவிலுக்கு யாத்திரை மேற்கொள்வார்கள். அந்த வகையில், இந்தாண்டு மண்டல பூஜையை வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 26ஆம் தேதி வரை நடை திறக்கப்பட இருக்கிறது. ஜனவரி 14ஆம் தேதி வரை மகர விளக்கு பூஜையை முன்னிட்டும் நடை திறக்கப்படும்.
இதை முன்னிட்டு, சபரிமலையில் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களுக்கு பகதர்களுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிமுதல் தொடங்குகிறது. sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக பக்தர்கள் தங்களின் தரிசன நேரத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 70 ஆயிரம் பக்தர்கள் இணையதளண் மூலம் பதிவு செய்யலாம். ஆன்லைன் வாயிலாக மட்டுமின்றி ஆப்லைனில் வண்டிப்பெரியார் சத்திரம், எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பாவில் முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தினமும் 20,000 பக்தர்கள் வரை நேரில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம்.
சபரிமலை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ளும்போது, விபத்து மூலம் உயிரிழப்பு நேர்ந்தால் தேவசம் வாரியம் அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. முதலில் கேரளாவின் நான்கு மாவட்டங்களில் சபரிமலை பக்தர்களுக்கு விபத்து மூலம் உயிரிழப்பு நேர்ந்தால் மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது கேரளாவில் எங்கு விபத்து நேர்ந்தாலும் அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர்கள் ஏற்றிச் செல்வதற்கு, ஆம்புலன்ஸ் செலவுகள் என கேரளாவிற்குட்பட்டிருந்தால் அவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலும், கேரளாவுக்கு வெளியே ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. இது சபரிமலை தேவஸ்வம் வாரியத்தின் நிரந்தர மற்றும் தினசரி கூலி ஊழியர்களுக்கும், யாத்திரை தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள பிற அரசுத் துறைகளின் ஊழியர்களுக்கும் இந்தக் காப்பீடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னர், சபரிமலையின் நிலக்கல்லில் இருந்து சன்னிதானம் வரையிலான இயற்கை மரணங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை. மாரடைப்பு உள்ளிட்ட இயற்கை மரணங்களுக்கு இழப்பீடு முன்பு வழங்கப்படவில்லை. தற்போது இயற்கை காரணங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு ஐடி இந்த இழப்பீட்டை பெறுவதற்கான அடிப்படை ஆவணமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ