)
Maharashtra News In Tamil: மகாராஷ்டிராவில் ரயிலில் கூட்டம் காரணமாக ரயிலில் பயணம் செய்தவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் இருந்து 13 பயணிகள் ரயில் பாதையில் விழுந்தனர். அதில் நான்கு பயணிகள் உயிரிழந்தனர். முன்னதாக இந்த எண்ணிக்கை ஐந்து பேர் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் ரயில்வே நிர்வாகம் நான்கு பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் ரயிலில் என்ன நடந்தது? குறித்து பார்ப்போம்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையினுடைய சத்திரபதி சிவாஜி ரயில் முனையத்திலிருந்து தானேவினுடைய கசரா பகுதியை நோக்கி சென்ற ரயிலிலிருந்து சிலர் தண்டவாளத்தில் விழுந்ததன் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டு உள்ளது.
திவா-கோப்பர் ரயில் நிலையத்திற்கு இடையே இந்த விபத்து நடந்ததாக மத்திய ரயில்வே கூறுகிறது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) நோக்கிச் செல்லும் உள்ளூர் ரயிலில் சில பயணிகள் பயணித்ததாக மத்திய ரயில்வே கூறுகிறது. மும்ப்ரா நிலையம் அருகே சில பயணிகள் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். அதிகப்படியான கூட்ட நெரிசலே பயணிகள் விழுந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் உள்ளூர் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இறந்தவர்கள் அனைவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.
#WATCH | On the Mumbra railway mishap, CPRO, Central Railway, Swapnil Dhanraj Nila says, "The first information given by the guard of the Kasara-bound local train was that six passengers were seen lying injured on the down-through track. Once the ambulances reached the spot, we… pic.twitter.com/DAcZgvgYL0
— ANI (@ANI) June 9, 2025
ரயில் மிகவும் நெரிசலாக இருந்ததாகவும், இதன் காரணமாக பயணிகள் ரயிலின் கதவில் தொங்கிக் கொண்டு பயணித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், திங்கட்கிழமை மும்ப்ரா ரயில் நிலையம் அருகே பல பயணிகள் உள்ளூர் ரயிலில் இருந்து விழுந்து இறந்ததாகவும், அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இறந்தவர்களில் மூன்று பேர் 23 வயது கேதன் திலீப் சரோஜ், ராகுல் சந்தோஷ் குப்தா, 34 வயது விக்கி பாபாசாகேப் முகிதால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திவா மற்றும் மும்பை நிலையங்களுக்கு இடையேயான உள்ளூர் ரயிலில் இருந்து எட்டு பயணிகள் விழுந்த சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம். காயமடைந்தவர்கள் உடனடியாக சிவாஜி மருத்துவமனை மற்றும் தானே சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். உள்ளூர் நிர்வாகம் நிலைமையை கண்காணித்து வருகிறது. சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறிய ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.
Deeply pained by the incident where 8 passengers fell from a local train between Diva and Mumbra stations, unfortunately leading to loss of lives. I offer my deepest condolences to the bereaved families. We stand with them in this difficult time.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) June 9, 2025
The injured passengers had been…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ