)
Odisha Man Slit Wife Throat : ஒடிசாவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. சண்டை போட்டு சென்ற மனைவியை, சமாதானம் செய்வதற்காக 175 கிலோமீட்டர் பயணித்து சென்ற கணவன், அவரது கழுதையை அறுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவிக்காக 175 கி.மீ சென்ற கணவன்!
ஒடிசாவில் ஒரு கணவன் மனைவி கடந்து சில நாட்களாக திருமண உறவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவரின் பெயர் ஷேக் அம்ஜாத். இவர் Cutttack என்ற இடத்திலிருந்து Balasore என்கிற இடத்திற்கு தனது மனைவியை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். மனைவி, சண்டை போட்டு பிரிந்து இங்கு இருப்பதால் அவரை சமாதானம் செய்து அழைத்து செல்வதற்காக கிட்டத்தட்ட 175 கிலோமீட்டர் பயணித்து வந்திருக்கிறார்.
ரோட்டில் இருவரும் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்ட பின்னர் கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் தனது மனைவியை அவர் தாக்க ஆரம்பித்திருக்கிறார். முடிவில் கத்தி ஒன்றை எடுத்து, அவரது கழுத்தை அறுத்திருக்கிறார். இதை அந்த ரோட்டில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
வைரல் வீடியோ…
மனைவியின் கழுத்தை அறுத்த கணவனின் வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் மனைவியின் முகத்தை பிடித்துவாறு அவர் முதலில் பேசுவதும், பின்னர் அது சண்டையாக மாறுவதும் தெரிகிறது. அதற்குப் பிறகு, அவர் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காண்பிப்பதும் ரோட்டின் ஓரத்தில் அழைத்துச் சென்று கழுத்தை அறுப்பதும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மனைவி எவ்வளவோ முயன்றும் அவரால் இவரது பிடியிலிருந்து விலக விலக முடியாமல் நின்றிருக்கிறார். இவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அருகே ஓடி வந்து இருவரையும் பிரித்துள்ளனர்.
அம்ஜாத்தை கையும் களவுமாக பிடித்த மக்கள், போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். காவல்துறையினர் குற்றவாளியை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றன.
மனைவிக்கு என்ன ஆனது?
கழுத்து அறுபட்ட நிலையில் இருந்த அம்ஜாத்தின் மனைவியை Balasore-ல் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு அவருக்கு அதிக காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததால், Cuttack-ல் இருக்கும் இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லூசா இருப்பானோ?
மேற்கூறிய சம்பவத்தை கேள்விப்பட்ட பலர், ‘ஒரு வேள இப்படி செய்தவன் லூசா இருப்பானோ?’ என்று கேட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ