டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு! யார் காரணம்? முழு விவரம்!

இன்று செங்கோட்டை அருகே நிகழ்ந்துள்ள வெடிவிபத்து சம்பவம், டெல்லி மக்களிடையே மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Nov 10, 2025, 07:49 PM IST
  • டெல்லி செங்கோட்டை அருகே..
  • சக்திவாய்ந்த வெடிவிபத்து:
  • கடைகள் சேதம், வாகனங்கள் தீக்கிரை!
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு! யார் காரணம்? முழு விவரம்!

தலைநகர் டெல்லியின் மிகவும் பாதுகாப்பு மிகுந்த பகுதியான, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகே இன்று திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சில கடைகளும், வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு டெல்லி காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | மகளின் காதலனால் கர்ப்பமான தாய்! அதுவும் 14 வயது சிறுவன்..பெண்ணை கைது செய்த போலீஸ்..

திடீர் வெடிவிபத்தால் மக்கள் பீதி

திங்கட்கிழமை மாலை நேரத்தில், செங்கோட்டைக்கு அருகிலுள்ள சந்தை பகுதியில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தால் நிலைகுலைந்த மக்கள், என்ன நடக்கிறது என்று தெரியாமல் பீதியில் உறைந்தனர். வெடிவிபத்தின் அதிர்வால், அப்பகுதியில் இருந்த பல கடைகளின் ஜன்னல்கள், கதவுகள் நொறுங்கி சேதமடைந்தன. உடனடியாக, டெல்லி காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை தீவிரம்

தகவல் அறிந்ததும், டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெடிவிபத்து நிகழ்ந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை. இது தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டெல்லியை உலுக்கிய முந்தைய சம்பவங்கள்

தலைநகர் டெல்லி, இதற்கு முன்பும் பலமுறை கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல்களைச் சந்தித்துள்ளது. குறிப்பாக 1996ல் லஜ்பத் நகர் மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். 2005ல் சரோஜினி நகர், பஹார்கஞ் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2008ல் கரோல் பாக், கன்னாட் பிளேஸ் போன்ற முக்கிய இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களின் நினைவுகள் இன்னும் ஆறாத நிலையில், தற்போது செங்கோட்டை அருகே நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், டெல்லி மக்களிடையே மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க | 4 வயது சிறுமிக்கு வன்கொடுமை... சாலையில் தூங்கியவரை கடத்திச் சென்று கொடூரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News