மதத்தை உறுதிசெய்ய பேண்டை கழற்ற சொன்ன தீவிரவாதிகள்.. கண்ணீர்விடும் குடும்பத்தினர்!

Pahalgam Terror Attack: பகல்காமில் நடந்த தாக்குதலின் போது, தீவிரவாதிகள் மதத்தை உறுதி செய்ய ஆண்களின் பேண்ட்களை கழற்ற சொல்லி மதத்தை உறுதி செய்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.  

Written by - R Balaji | Last Updated : Apr 23, 2025, 01:34 PM IST
  • ஜம்மு காஷ்மீர் பகல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் பலி ஆகியுள்ளனர்
  • இந்த தாக்குதலின் போது ஆண்களின் பேண்டுகளை தீவிரவாதிகள் கழற்ற சொல்லி உள்ளனர்
மதத்தை உறுதிசெய்ய பேண்டை கழற்ற சொன்ன தீவிரவாதிகள்.. கண்ணீர்விடும் குடும்பத்தினர்!

ஜம்மு காஷ்மீர் அருகே உள்ள பகல்காம் பகுதியில் நேற்று திடீரென தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில், சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான பகல்காம் பைன் மரக்காடுகள் அடர்ந்திருக்கும் ஒரு பகுதி ஆகும். இந்த பகுதி இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கிசூடு தாக்குதலில் சுமார் 26 பேர் பலி ஆகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களை உருவாக்க சென்றவர்களுக்கு மறக்க முடியாத கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சுற்றுலாபயணிகளின் அடையாள அட்டை, மதம் ஆகியவற்றை கேட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர் என இச்சம்பவத்தை கண்டவர்கள் விவரித்துள்ளனர். 

அதேபோல், ஆண்களின் பேண்டை கழற்ற சொல்லி, அவர்களின் அந்த உறுப்பு, இஸ்லாமியர்கள் போல் சுன்னத் செய்யப்பட்டுள்ளதா? என்பதை பார்த்து மதத்தை உறுதி செய்து பின்னர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் சுற்றுலா பயணிகளின் மதநம்பிக்கை குறித்து கேட்ட பின் கொன்றுள்ளனர். இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த பெண் ஒருவர் போலீசாரிடம் கூறுகையில், நானும் என் கணவரும் தப்பி ஓடும்போது, ஒரு தீவிரவாதி என் கைகளில் இருந்த வளையல்களை பார்த்து நாங்கள் இந்து என்பதை உறுதி செய்தார். பின்னர் என் கணவரிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு அவர் பதில் கூறியதை அடுத்து என் கண்முன்னே சுட்டுக்கொன்றனர் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுமார் 50 ரவுண்டுகளுக்கு மேல் சுட்டதாகவும் தூப்பாக்கி சூடு 3 முதல் 5 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட 26 சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் உள்ளூர்வாசி, பலர் துப்பாக்கி குண்டுகள் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். 

மேலும் படிங்க: பகல்காம் தாக்குதல் : பாரமுல்லாவில் எல்லை தாண்டிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

மேலும் படிங்க: Pahalgam Terror Attack : பகல்காம் தீவிரவாத தாக்குதல் தீவிரவாதிகள் பின்னணி - என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News