காவல்துறையின் ராஜ உபசரிப்பில் அடுத்த சாமியார்!
சமீப காலமாக இந்தியாவில் சாமியார்களின் வரவு அதிகமாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு வட இந்தியாவில் பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் கைதானை அடுத்து மற்ற சாமியர்களின் மீது மக்களின் கவனம் சென்றுள்ளது.
புது டெல்லி: சமீப காலமாக இந்தியாவில் சாமியார்களின் வரவு அதிகமாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு வட இந்தியாவில் பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் கைதானை அடுத்து மற்ற சாமியர்களின் மீது மக்களின் கவனம் சென்றுள்ளது.
ராம் ரஹிமை அடுத்து அவரைப் போலவே தன்னைத் தானே கடவுள் என பிரகடனம் படுத்திக்கொண்டு வளம் வருபவர் ராதா மா.,
போலி சாமியார்களை பற்றி எத்தனை புகார்கள் வந்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை, மாறாக அவர்களை கடவுளாகவே தொடர்ந்து பாவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி காவல் நிலையித்தில் ராதா மா -வினை காவல்துறை அதிகாரி வரவேற்று உபசரிக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றது.