கொடூரம்! கிணற்றில் குளித்த 3 தலித் சிறுவர்கள் மீது தாக்குதல்!

கடந்த 10-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.

Last Updated : Jun 15, 2018, 09:02 AM IST
கொடூரம்! கிணற்றில் குளித்த 3 தலித் சிறுவர்கள் மீது தாக்குதல்! title=

கடந்த 10-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.

நிர்வாணமாக வைத்து தாக்கியது மட்டுமின்றி அந்த சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அப்பகுதி மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த சம்பவம் வீடியோவாக பதிபாகி உள்ளது. மேலும் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 சிறுவர்களும் தலித் பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சமூக நீதி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Trending News