)
ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றிருந்தாலும் அதனை கொண்டாட முடியாத சூழ்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பையை வென்ற தங்கள் அணி வீரர்களை பார்க்க ரசிகர்கள் கூடிய போது இந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. மைதானத்திற்கு உள்ளே வெற்றி கொண்டாடுங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஆர்சிபியின் வெற்றி அணிவகுப்பு
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து 18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல்லில் முதல் கோப்பையை வென்றனர். பிறகு அங்கிருந்து சிறப்பு விமானம் மூலமா புதன்கிழமை மதியம் பெங்களூருக்கு வீரர்கள் வந்தனர். ஆர்சிபி வீரர்களுக்கு சவுதாவில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்த வெளி பேருந்தில் ஆர்சிபி வீரர்கள் வரும் படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் பிறகு சாதாரண பேருந்திலேயே மைதானத்திற்கு வந்தனர்.
நீடித்த குழப்பம்
காலையில் ஆர்சிபி தரப்பிலிருந்து வெற்றி அனுபவிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மதியம் காவல்துறை சார்பில் வெற்றி அணி வகுப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொது மக்களுக்கு எந்த வித சிரமமும் ஏற்படாமல் இருக்க தடை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் ஆர்சிபி அணி மாலை 5 மணிக்கு வெற்றி அணி வகுப்பு நடைபெறும் என்று தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்து ஒரே இடத்தில் கூடும் சூழ்நிலை ஏற்பட்டது. மாலை 5 மணிக்கு வெற்றி அணி வகுப்பு தொடங்கும் முன்பே சின்னச்சாமி மைதானத்திற்கு அருகில் அதிகப்படியான கூட்டம் கூடியது. கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று லட்சம் ரசிகர்கள் ஒரே இடத்தில் திரண்டு உள்ளனர். இதனால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக 11 உயிர் பிரிந்துள்ளது.
தலைவர்கள் இரங்கல்
இந்த ஆர்சிபி அணி வகுப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். சின்னச்சாமி மைதானம் 35 ஆயிரம் பேர் மட்டுமே அமரும் திறன் கொண்டுள்ளது. ஆனால் மைதானத்திற்கு வெளியே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மாநில அரசும், கர்நாடக கிரிக்கெட் சங்கமும் இவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார். பிரதமர் மோடி தொடங்கி இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய தலைவர்களும் பெங்களூரில் நடந்த இந்த துரதிஷ்ட சம்பவங்களுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர். இனி இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறாது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ