)
Benefit Of Annual FASTag Toll Pass: சாலை மார்க்கமாக அதிக தூரம் பயணிப்பவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் (Toll Pass) குறித்து நன்கு தெரிந்திருக்கும்.
காரிலோ, வேனிலோ, பேருந்திலோ பயணித்தால் சுங்கச் சாவடிக்கு என்று தனியாக கட்டணத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சமீபத்தில் ஓராண்டாக்கான Annual FASTag திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.அதாவது, இதில் ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் செலுத்தினால் போதும். அதன்மூலம், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் (NH) மற்றும் தேசிய விரைவுச்சாலைகள் (NE) ஆகியவற்றில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீங்கள் FASTag பயன்படுத்தி சென்றுவிடலாம்.
ஓராண்டுக்கு தான் இது செல்லுபடியாகும், அதேநேரத்தில் நீங்கள் 200 Trip-களுக்கு மட்டுமே பயன்படுத்தவும் முடியும். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த வருடாந்திர FASTag நடைமுறை அமலுக்கு வந்தது. இன்னும் இரண்டு மாதங்கள் முழுமையாக நிறைவடையாத சூழலில், இந்த வருடாந்திர FASTag திட்டத்தை ஒருவர் அதிகளவில் பயன்படுத்திவிட்டார் என்றால் நீங்கள் நம்புவீர்களா...? ஆனால் அப்படி நடந்துள்ளது.
சுற்றுலா பயணி ஒருவர், 25 நாள்களில் 13 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 12 ஜோதிர்லிங்கங்கள் மற்றும் 4 கோவில்களில் தரிசனம் செய்துள்ளார். மொத்தம் 11 ஆயிரம் கி.மீ., தூரம் பயணித்துள்ளார். அவர் இந்த பயணத்தை தொடங்கியபோது 199 Trip அவரின் FASTag-ல் இருந்துள்ளது. ஆனால் அவரின் பயணத்தின் முடிவில் 119 Trip முடிந்துள்ளது. இன்னும் 80 Trip மட்டுமே உள்ளன.
அதாவது, நீங்கள் வருடாந்திர பாஸ் வாங்காமல் இப்படி 119 Trip பயன்படுத்தினால் சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை சுங்கக் கட்டணத்திற்கு செலவாகியிருக்கும். ஆனால், வருடாந்திர பாஸ் எடுத்ததால் அவர் சுமார் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை சேமித்திருக்கிறார்.
மேலும், இவர் இந்த பாஸ் செல்லுபடியாகாத சில தேசிய நெடுஞ்சாலைகளிலும் சென்றுள்ளார். குறிப்பாக, ஆக்ரா - லக்னோ தேசிய விரைவுச்சாலையிலும் சென்றிருக்கிறார். அவற்றின் சுங்கக் கட்டணம் மட்டும் ரூ.2,439 செலவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் ஓஷோ சாலையில் சுங்கக் கட்டணமாக ரூ.300, சம்ருதீ மார்க் சாலையில் ரூ.240, புரவாஞ்சல் விரைவுச்சாலையில் ரூ.250 வசூலித்ததாக தெரிவித்தார்.
அந்த சுற்றுலா பயணி அவரது இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து விரிவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, "கடந்த 25 நாள்களில் 119 Trip-கள் எனது வருடாந்திர டோல் பாஸில் நிறைவடைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்கத்தை தரிசித்தேன், 4 கோவில்களுக்குச் சென்றேன். தனியாக சாலை மார்க்கமாக பயணித்தேன்" என குறிப்பிட்டிருந்தேன். மேலும் வீடியோவில், "இதை செய்யும் முதல் இந்தியன், வருடாந்திர டோல் பாஸ், 25 நாள்களில் 120 Trip-களை கழித்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதை சமூக வலைதளங்களில் பலரும் பார்த்து வியப்படைந்து தங்களின் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டம், தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்போருக்கு எந்தளவிற்கு உதவிகரமாக இருக்கிறது என்பதையும் இச்சம்பவம் விளக்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அடுத்து சாலை மார்க்கமாக சுற்றுலா செல்ல நினைப்போரும் உடனடியாக இதை செய்யுங்கள் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ