)
UP Man Murdered 52 Year Old Girlfriend : இந்தியாவிலேயே, உத்திர பிரதேசம்தான் பெரிய மாநிலமாக விளங்குகிறது. அதானாலேயோ என்னவோ, இந்த மாநிலத்தில் கொஞ்சம் வினோதமான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஃபில்ட்டர் மூலம் தன்னை ஏமாற்றிய 52 வயது பெண்ணை 26 வயது காதலன் கொடூரக் கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மைன்புரி மாவட்டத்தில், கடந்த 11-ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு பெண், கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் கொலை செய்யப்பட்டவர், உத்தரப்பிரதேசம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் வசிக்கும் ராணி என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்திற்கு சில நாட்கள் முன்புதான் அவர் காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினரால் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராணியின் செல்போன் எண்ணை ட்ராக் செய்து கொலை செய்யப்படுவதற்கு முன் அவர் யாரிடம் செல்போனில் பேசியுள்ளார் என போலீசார் ஆய்வு செய்தனர்.
ராணிக்கு, அடிக்கடி போன் செய்து பேசிய அருண் ராஜ்புத் என்பவரை போலீசார் தேடிப்பிடித்தனர். கடந்த ஒரு வருடங்களாக இருவரும் மணிக்கணிக்கில் போனில் பேசி வந்துள்ளனர். அருணிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தன. குருகிராமில் கன்டெய்னர் டிரைவராக பணியாற்றி வந்த அருணிற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பரான பழகிய அருண், ராணியின் புகைப்படத்தை பார்த்து காதலிக்க ஆரம்பித்துள்ளார். செல்போன் எண்ணைப் பகிர்ந்து இரவு பகல் பார்க்காமல் பேசி வந்துள்ளனர்.
நேரில் சந்திக்காமல் போனிலேயே ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது நேரில் பார்க்க வேண்டும் என அருண் ராணியிடம் கேட்டுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட காதலி ராணி, ஃபரூக்காபாத்தில் உள்ள ஹோட்டலில் அவரை சந்தித்துள்ளார். அப்போது அருண் ராஜ்புத் காதலியை கண்டு கடும் விரக்தி அடைந்துள்ளார். ன்ஸ்டாவில் பார்த்த ராணிக்கும், நேரில் வந்த ராணிக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்துள்ளது. இன்ஸ்டாவில் இளம்பெண் போல இருந்த ராணிம் நேரில் பாட்டி போல இருந்துள்ளார். இதனால் ராணியை கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏமாற்றியதால் கொலை!
அதோடு ராணி குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. ராணிக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதும் கருத்துவேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. அதோடு ராணிக்கு 52 வயது என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் 26 வயதான அருண் சண்டை போட்டுள்ளார். ஆனால் ராணியோ அருணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி டார்ச்சர் செய்துள்ளார். என தெரிந்ததும், 26 வயதே ஆன அருண் உடைந்து போயுள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ராணிக்கோ! உண்மை தெரிந்து விட்டதே என்று கொஞ்சம் கூட தயக்கம் இல்லை.தொடர்ந்து அருணிற்கு கால் செய்து திருமணம் செய்து கொள்ள அழுத்தம் கொடுத்துள்ளார். காதலிக்கும்போது வாங்கிய ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை அருண் கொடுக்க வேண்டும் எனவும் ராணி வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண் திருமணம் தொடர்பாகப் பேச வேண்டும் என அழைத்து தலைக்கு கட்டும் ஸ்கார்ப்பால் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனை வாக்குமூலமாக அருண் போலீசில் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராமில் ஃபில்ட்டர் மூலம் 52 வயதை மறைத்து இளம்பெண் போல ஏமாற்றி 26 வயது இளைஞரைக் காதலித்த பெண் கொடூரக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ