ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட லக்னோ காதல் ஜோடி!

லக்னோ-விட் பரபாங்கி மாவட்டத்தில் மரத்தின் மீது ஒரே கயிற்றில் ஆண், பெண் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Aug 25, 2019, 01:13 PM IST
ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட லக்னோ காதல் ஜோடி! title=

லக்னோ-விட் பரபாங்கி மாவட்டத்தில் மரத்தின் மீது ஒரே கயிற்றில் ஆண், பெண் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பரபாங்கி மாவட்டத்தில் ஆண், பெண் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், அதற்கு இருவரது குடும்பத்திலும் எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் காதல் தம்பதிகள் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட இருவரும் 22-ஆம் தேதி இரவிலிருந்தே காணவில்லை என தெரியவந்துள்ளது. அதன் பின்னர் இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று தெரிகிறது. மேலும் இது குறித்து தீவிர விசாரணையை காவல்துறையினர் நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News