என் குழந்தைக்கு நீ தான் அப்பா.. மறுத்தால் கொன்றுவிடுவேன்.. கணவனை மிரட்டிய மனைவியால் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் வேறு ஒருவரால் கர்ப்பம் ஆகிவிட்டு, நீ தான் குழந்தைக்கு அப்பா, மறுத்தால் கொன்றுவிடுவேன் என கணவனை மிரட்டிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Apr 20, 2025, 01:26 PM IST
என் குழந்தைக்கு நீ தான் அப்பா.. மறுத்தால் கொன்றுவிடுவேன்.. கணவனை மிரட்டிய மனைவியால் பரபரப்பு!

உத்தரபிரதேசம் மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதாப். இவருக்கும் சந்த் கபீர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே மன பொருத்தம் இல்லாமல் இருந்தது. ஜோதா தனது கணவரை தன்னிடம் நெருங்க விடாமல், தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் உடல் ரீதியான உறவு இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து தனது குடும்பத்தினரிடம் கணவர் பிரதாப் புலம்பி தவித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. பெற்றோர் பெரியோர் சமாதானப் படுத்தியும் தகராறு தீரவில்லை. தகராறு காரணமாக அடிக்கடி தாய் வீட்டுக்கு மனைவி ஜோதா சென்று விடுவது வழக்கம்.

அதுபோலவே கடந்த ஆண்டு நவம்பரில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி ஜோதா திரும்பி வரவில்லை. கணவர் நேரில் சென்று வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது ஏப்ரலில் வருவதாக கூறி உள்ளார். சண்டையிட்டு அழைத்து பார்த்தும் மனைவி ஜோதா மனம் மாறாததல், கணவர் பிரதாப் வேறு வழியின்றி தனியாக வீடு திரும்பினார்.

இதையடுத்து ஏப்ரலில் ஜோதா திரும்பவும் வீட்டிற்கும் வந்துள்ளார். ஆனால் திரும்ப வந்ததில் இருந்து ஜோதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால், கணவர் பிரதாப் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குதான் கணவர் பிரதாப்புக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் மனைவி ஜோதா 14 வார கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப் குழம்பி போனார். உடல் ரீதியான உறவு ஏதுவுமே இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என மறுத்துள்ளார். நம்ப முடியாமல் வேறு சில மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று பார்த்துள்ளார். அங்கும் கர்ப்பம் உறுதியானது. ஆவேசமடைந்த கணவர் பிரதாப், மனைவி ஜோதாவிடம் விசாரித்தபோது தகராறு ஏற்பட்டது. 

ஒரு கட்டத்தில் தகராறு முற்றியபோது, ஆமாம், வேறு ஒருவரால் தான் கர்ப்பமாக இருக்கிறேன். அதற்கென்ன? என்னையும் பிறக்கப்போகும் குழந்தையையும் ஏற்காவிட்டால், உன்னை கொன்றுவிடுவேன். வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக காவல்துறையினரிடம் புகார் அளிப்பேன் என மனைவி ஜோதா கூறி மிரட்டி உள்ளார்.

இதையடுத்து பிரதப் மஹராஜ்கஞ்ச் காவல் நிலையத்தில், அவர் புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலின சமத்துவ சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் இது. தலைவிதி இதுதான் என சமாதானமாகி மனைவியையும் குழந்தையையும் ஏற்பதைத் தவிர, அவருக்கு நம் நாட்டு சட்டப்படி வேறு வழியில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிங்க: ஆசிரியர் மீது பொய் பாலியல் வழக்கு தொடுத்த மாணவி! 7 வருடங்களுக்கு பின்பு வெளியான உண்மை..

மேலும் படிங்க: உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக பேசிய பாஜக எம்.பி.க்கள் - சர்ச்சையும்... கண்டனங்களும்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News