)
Amit Shah Attack On Congress: பீகாரில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை மேற்கோள்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாகக் கண்டித்துள்ளார். அசாமின் குவஹாத்தியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "காங்கிரசும் அதன் தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியை எவ்வளவு அவமதிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தாமரை மேலும் மேலும் மலரும், இன்னும் பெரிதாகும்" என பதிலடி தந்துள்ளார்.
குவஹாத்தியில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய அமித்ஷா, காங்கிரஸின் இத்தகைய நடவடிக்கைகள் வெட்கக்கேடானது மட்டுமல்ல, பாஜகவின் வெற்றிக்கான பாதையை மேலும் வலுப்படுத்துகின்றன என்றும் கூறினார். இந்த சம்பவத்தை நாட்டு மக்களின் உணர்வுகள் மீதான தாக்குதல் என்று அவர் விவரித்தார். மேலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
- இந்தியாவுடன் சேர்ந்து, நமது பிரதமரின் மரியாதையும் அதிகரித்துள்ளது.
- 27 நாடுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் மிக உயர்ந்த குடிமகன் விருதை வழங்கி கௌரவித்துள்ளன.
- இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். உலக நாடுகள் பிரதமரை மதிக்கிறது.
- ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய அரசியலில் வெறுப்பு மற்றும் அவமதிப்பு என்ற எதிர்மறை அரசியலைத் தொடங்கியுள்ளார்.
- காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் "வாக்காளர் உரிமை யாத்திரை"யை "ஊடுருவல் உரிமை யாத்திரை" என் விமர்சனம் செய்துள்ளார் அமித் ஷா.
- பீகாரில் அவர்கள் மேற்கொண்ட இந்த ஊடுருவல் உரிமை யாத்திரையில் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரை அவமதித்து காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் அருவருப்பான செயலைச் செய்தனர்.
- இதை நான் கண்டிக்கிறேன். ராகுல் காந்தி தொடங்கிய அரசியல் நமது பொது வாழ்க்கையை உயர்த்தாது, மாறாக அதை ஆழத்திற்கு கொண்டு செல்லும்.
- நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் அவரைப் பற்றி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர்,.
- ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை நீங்கள் எவ்வளவு அதிகமாக அவமதிக்கிறீர்களோ, அவ்வளவு உயரத்துக்கு தாமரை மலர் இன்னும் பெரிதாக மலரும் என்பதை காங்கிரஸ் நினைவில் கொள்ள வேண்டும்
- ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் துஷ்பிரயோகம் செய்து தோல்வியை சந்தித்ததாக அமித் ஷா கூறினார்.
- தற்போது நமது வெற்றியை மறைக்க ஊடுருவல் உரிமை யாத்திரையை மேற்கொள்கிறார்கள்.
- ஊடுருவல்காரர்கள் வாக்காளர் பட்டியலில் நுழைவதன் மூலம் தேர்தலை மாசுபடுத்தினால், எந்த மாநிலமும் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்த காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் பவன் கேரா கூறுகையில், "பாஜக தான் முதலில் துஷ்பிரயோகங்களைச் செய்தது என்றும், இப்போது அவர்கள் ஒரு பிரச்சினையை உருவாக்க நினைக்கிறார்கள் என்றும் கூறினார். பாஜக முகவர்கள் சுற்றித் திரிந்து, தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று அவர் கூறினார். அவர்கள் எங்கள் யாத்திரையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஒரு பிரச்சினையை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்களின் திருட்டு பிடிபட்டுவிட்டது. அதனால்தான் மக்கள் கோபமாக உள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் யார், அவர் யாருடையவர் என்பதைக் கண்டறியவும். பொதுமக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் பாஜகவின் குண்டர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது" எனக் கூறினார்.
பீகாரில் தேர்தல் சூழலுக்கு மத்தியில் காங்கிரஸின் 'வாக்காளர் உரிமை யாத்திரை'யின் போது, தர்பங்காவில் சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் போஸ்டர்கள் மேடையில் காணப்பட்டன. இந்த விஷயத்தில் பாட்னாவில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் பாஜக எஃப்ஐஆர் பதிவு செய்ததோடு, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22