)
BJP Workers Attack Congress Office: பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை அவமதித்ததாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது வருகிறது. பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் முன்பாக பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்பொழுது பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.இந்த விவகாரத்தால் பீகாரில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. பாஜகவினரின் வெறியாட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தனது X தளத்தில், பாஜகவின் போராட்டம் குறித்து, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "உண்மை மற்றும் அகிம்சைக்கு முன்னால் பொய்யும் வன்முறையும் நிற்க முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் எவ்வளவு அடிக்க வேண்டுமோ அடியுங்கள், எவ்வளவு உடைக்க வேண்டுமோ உடையுங்கள். உங்கள் விரும்பம் போல செயல்படுங்கள். ஆனால் உண்மையையும் அரசியலமைப்பையும் நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம். சத்யமேவ ஜெயதே" எனப் பதிவிட்டுள்ளார்.
सत्य और अहिंसा के आगे
— Rahul Gandhi (@RahulGandhi) August 29, 2025
असत्य और हिंसा टिक ही नहीं सकते।
मारो और तोड़ो, जितना मारना-तोड़ना है - हम सत्य और संविधान की रक्षा करते रहेंगे।
सत्यमेव जयते।
இன்று (வெள்ளிக்கிழமை) ராகுல் காந்தியின் 'வாக்காளர் உரிமை யாத்திரை' பயணத்தின் போது மேடையில் பேசிய காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது மறைந்த தாய்க்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னாவில் பாஜக நடத்திய பேரணியின் போது, பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அதாவது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தர்பங்காவில் உள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சதகத் ஆசிரமத்திற்கு நுழைந்து பாஜக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். சதகத் ஆசிரமத்தை பாஜக தொண்டர்கள் சேதப்படுத்தியதாகவும், அங்கு இருந்த தொண்டர்களை தாக்கியதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜகவின் 'குண்டர் ராஜ்ஜியத்திற்கு ' எதிர்ப்புத் தெரிவித்து சதகத் ஆசிரமத்தின் வாயிலுக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் குழு தர்ணாவில் ஈடுபட்டது.
பாஜக பேரணி குறித்தி உள்ளூர் செய்தி ஊடகங்களின் அறிக்கையின்படி, அமைச்சர்கள் நிதின் நவீன், சஞ்சய் சரோகி மற்றும் எம்எல்ஏ சஞ்சீவ் சௌராசியா போன்ற மூத்த தலைவர்கள் தலைமையிலான பாஜக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாநில காங்கிரஸ் தலைமையக சதகத் ஆசிரமத்திற்கு பேரணியாகச் சென்றனர். இங்கு காங்கிரஸ் தொண்டர்கள் சதகத் ஆசிரமத்தின் கதவுகளை உள்ளே இருந்து மூடிவிட்டு பாஜக தொண்டர்கள் மீது கற்களை வீசியதாகபும், அதன் பிறகு பாஜக தொண்டர்கள் அவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசியும், ராகுல் காந்தியின் படங்கள் மீது கிழித்ததாகவும் மற்றும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.
காவல்துறை தலையீட்டிற்குப் பிறகு பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையேயான மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாட்னா (மத்திய) காவல் கண்காணிப்பாளர் திக்ஷா கூறுகையில், "இது ஒரு சிறிய மோதல்தான், இரு தரப்பிலிருந்தும் மக்கள் காயமடைந்ததாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. முழு விஷயமும் விசாரிக்கப்பட்டு அதற்கேற்ப மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
முன்னதாக குவஹாத்தியில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய அமித்ஷா, காங்கிரஸின் இத்தகைய நடவடிக்கைகள் வெட்கக்கேடானது மட்டுமல்ல, பாஜகவின் வெற்றிக்கான பாதையை மேலும் வலுப்படுத்துகின்றன என்றும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியை நீங்கள் எவ்வளவு அதிகமாக அவமதிக்கிறீர்களோ, அவ்வளவு உயரத்துக்கு தாமரை மலர் இன்னும் பெரிதாக மலரும் என்பதை காங்கிரஸ் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தை நாட்டு மக்களின் உணர்வுகள் மீதான தாக்குதல் என்று கூறிய அமித்ஷா, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வாக்காளர் உரிமை யாத்திரையின் போது, தர்பங்காவில் சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22