ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் முடிந்து விட்டது. பல வித அலங்காரங்களுடன் ராமர் தன் சொந்த இருப்பிடத்திற்கு திரும்பி விட்டார்.
இன்று நடந்த பிராண பிரதிஷ்டையின் போது பிரதமர் மோடி அவர்கள் பூஜை, அர்ச்சனை செய்து பாரம்பரிய வழியில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இப்போது மக்கள் தரிசனம் செய்ய அயோத்தி ரமார் கோயில் திறக்கப்பட்டு விட்டது. பக்தர்களும் அயோத்தி செல்ல தயாராகி வருகின்றனர்.
ஆனால் இப்போது அயோத்திக்கான விமான கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன.
ஆனால், இன்னும் 10 நாட்கள் கழித்து அயோத்திக்கு சென்றால், உங்களுக்கு மிகக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் கிடைக்கும்.
இன்றைய நிலவரப்படி 22-25 ஆம் தேதிகளுக்கு மத்தியில் பெரும்பாலான விமான டிக்கெட்டுகள் 10,000 முதல் 15,000 ரூபாய் வரை உள்ளன.
ஆனால் 10 நாட்கள் கழித்து டிக்கெட் புக் செய்தால், டிக்கெட் விலை 3000-5000 ரூபாயாக உள்ளது.
ஆன்லைனில் பிப்ரவரி 3 ஆம் தேதி டெல்லியிலிருந்து அயோத்திக்கு ரூ.3,522-ரூ.4,408 என்ற விலையில் இப்போது புக் செய்யலாம்.