)
Indian Railways: இந்திய ரயில்வே துறையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயங்குகின்றன, லட்சக்கணக்கில் மக்கள் தினமும் பயணிக்கிறார்கள். அதேநேரத்தில் லட்சக்கணக்கான பணியாளர்களும் தினமும் ரயில்வேயில் பணியாற்றுகின்றனர். இந்தளவிற்கு பெரிய நெட்வார்க்கை வைத்திருக்கிறது, இந்திய ரயில்வே.
அப்படியிருக்க, இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர் ரயில்களில் பயணம் செய்வது முற்றிலும் என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஊழியர்களின் குடும்பத்தினர் எந்த ரயிலில், எப்போது வகுப்பிலும், எப்போது வேண்டுமானாலும் இலவசமாக பயணிக்கலாம் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது தவறு. ஊழியர்களின் குடும்பத்தினர் ரயில்களில் சலுகையுடன் பயணிக்க சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் ரயில்களில் சலுகையுடன் பயணிக்க பாஸ்கள் வழங்கப்படும். அவற்றில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. சில நேரங்களில் ரயில்வே ஊழியர்களும் ஒரு சில இடங்களுக்குச் செல்ல டிக்கெட்டை பணம் கொடுத்து வாங்க வேண்டும். இந்த பாஸ்கள் மூலம் நீங்கள் குறுகிய காலத்திற்கு இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம்தான், ஆனால் எந்தவித தடையும் இன்றி இலவசமா பயணம் செய்ய முடியாது.
இதுகுறித்து ஓய்வுபெற்ற ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நீங்கள் ரயில்வே துறையின் ஊழியராக 5 ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர், உங்களுக்கு பாஸ்கள் மற்றும் PTOs (சிறப்புரிமை டிக்கெட் சலுகை) ஆகியவை ஊழியர்களுக்கு இந்திய ரயில்வே வழங்கும்" என்கிறார். இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு ஓராண்டுக்கு மூன்று இலவச ரயில்வே பாஸ்கள் வழங்கப்படும். நான்கு PTOs வழங்கப்படும். 5 வருட பணியை நிறைவு செய்யாமல் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு வேறு விதமான பாஸ்கள் வழங்கப்படும். இது அதிகாரிக்கு அதிகாரி மாறுப்படும் என்றும் கூறப்படுகிறது.
இலவச ரயில்வே பாஸை வைத்து ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் இலவசமாக பயணிக்கலாம். ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே... அதேநேரத்தில், PTO பாஸ்களுக்கு ஊழியர்கள் டிக்கெட் விலையில் மூன்றில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும். இதை ஆண்டுக்கு நான்கு முறை பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஊழியர்களின் வாழ்க்கை துணை, குழந்தைகளுக்கு இந்த பாஸ்கள் செல்லுபடியாகும். அதேநேரத்தில் ரயில்வே ஊழியரை சார்ந்திருக்கும் அவரது பெற்றோருக்கும் கூட பாஸ்கள் கிடைக்கும்.
ஒருவேளை ரயில்வே ஊழியரின் குடும்பத்தினர் 3 இலவச பாஸ்கள் மற்றும் 4 PTO பாஸ்களை ஒரு வருடத்திற்குள் தீர்த்துவிட்டால் அடுத்தாண்டு வரும் வரை சாதாரண பயணிகள் போன்று அவர்களும முழு கட்டணத்தைச் செலுத்திதான் ரயிலில் பயணிக்க முடியும். ஓராண்டில் அந்த பாஸ் மற்றும் PTO காலாவதியாகிவிடும். புதிய இலவச பாஸ்கள் மற்றும் PTO பாஸ்களை பெற ஊழியர்கள் அவர்களின் ரயில்வே அடையாள அட்டை, சேவை சான்றிதழ் மற்றும் தேவையான ஆவணங்களை ரயில்வே நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். ஊழியர்கள் அதை சமர்பிக்கும்போது கொடுத்த குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே இந்த பாஸ்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ