)
Waqf Amendment Bill 2025: வக்பு சட்டத்திருத்த மசோதா கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அதில் மாற்றங்களை செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
Waqf Amendment Bill 2025: மசோதா மீதான விவாதத்தில் அமித் ஷா
இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிந்துரைக்கப்பட்ட 25 மாற்றங்களுக்கும் இன்று இந்த மசோதாவின் புதிய வரைவு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, வக்பு சட்டத்திருத்த மசோதா 2025, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவால் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு இன்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த மசோதாவின் மீது விவாதம் செய்ய சுமார் 8 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வக்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
Waqf Amendment Bill 2025: வேறொருவரின் சொத்தை தானம் செய்ய இயலாது
அப்போது, அவர் வக்பு வாரியத்திற்காக வழங்கப்பட்டதாக கூறப்பபடும் சொத்துக்களின் நீண்ட பட்டியலை வாசித்தார். அந்தப் பட்டியலில் கோயில்களின் நிலங்கள், பிற மதங்களின் நிலங்கள், அரசாங்கத்தின் நிலங்கள் மற்றும் மற்றவர்களுக்கு சொந்தமான நிலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக, அவர் "நீங்கள் வேறொருவரின் சொத்தை தானம் செய்ய முடியாது. உங்களுடையதை தானம் செய்ய முடியும்" என்றார்.
#WATCH | #WaqfAmendmentBill | Union Home Minister Amit Shah says, "...Had Waqf not been amended in 2013, this (Amendment Bill) Bill would not have been needed. Everything was going well. But there were elections in 2014, and overnight in 2013, the Waqf Act was turned extreme for… pic.twitter.com/mfI0iv4vtK
— ANI (@ANI) April 2, 2025
(டெல்லியின்) லுட்யன்ஸ் மண்டலத்தில் உள்ள சொத்துக்கள் வக்பு வாரியத்திற்கு சென்றன. மேலும், வக்பு அரசாங்க நிலத்தை கையகப்படுத்தத் தொடங்கினர். தமிழ்நாட்டில், 400 ஆண்டுகள் பழமையான கோயில் சொத்து வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டது. பிரயாக்ராஜில் உள்ள சந்திர சேகர் ஆசாத் பூங்கா உட்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல சொத்துக்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டன. ஐந்து நட்சத்திர நிறுவனத்திற்கான நிலம் வக்பு வாரிரயத்திற்கு மாதம் 12,000 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.
Waqf Amendment Bill 2025: வெளிப்படைத்தன்மை வரும்
இதையெல்லாம், இந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இதை அனைத்தையும் தடுக்கும். இந்த மசோதா சொத்துக்களைப் பாதுகாக்கும். ASI சொத்துக்கள், பழங்குடியினரின் நிலங்கள், தனியாரின் சொத்துக்கள் மற்றும் நீங்கள் தனியார், தனிப்பட்ட சொத்தை மட்டுமே வக்பு வாரியத்திற்கு நன்கொடையாக வழங்க முடியும். ஒரு சமூகத்தின் நிலத்தை அல்ல. இந்த மசோதா வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்" என்றார்.
Waqf Amendment Bill 2025: காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு
மேலும் இந்த நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என குற்றஞ்சாட்டினார். 2013 ஆம் ஆண்டில், அவர்கள் (காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்) நில அபகரிப்பு புகார்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் விதியை நீக்கிவிட்டது. அவர்கள் செய்த பாவம் அது. புதிய மசோதா பாதகம் செய்யாது, ஆனால் அவர்கள் மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள்.
மக்களிடம் இருந்து 1 கோடிக்கும் அதிகமான ஆலோசனைகளை பெற்றுள்ளோம். எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது, வாக்கு வங்கிக்காக எந்த சட்டத்தையும் நாங்கள் கொண்டு வர மாட்டோம், இது நீதிக்கானது" என்றார். மேலும் இந்த மசோதா, கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Waqf Amendment Bill 2025: பழைய நாடாளுமன்ற கட்டடம் மீதான வழக்கு
மக்களவையில் முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ,"1970ஆம் ஆண்டு முதல் டெல்லியில் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. பழைய நாடாளுமன்ற கட்டடம் உட்பட பல சொத்துக்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என உரிமை கோரினர். டெல்லி வக்ஃப் வாரியம் இவற்றை உரிமை கொண்டாடியது. வழக்கு நீதிமன்றத்தில் இருந்தது, ஆனால் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி 123 சொத்துக்களை De-Notify செய்து வக்பு வாரியத்திடம் வழங்கியது.
இன்று இந்தத் திருத்தத்தை நாம் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால், நாம் இருக்கும் இந்த கட்டடம் (புதிய நாடாளுமன்ற கட்டடம்) கூட வக்ஃப் சொத்தாக உரிமை கோரப்பட்டிருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லை என்றால் இன்னும் பல சொத்துக்களும் கைவிட்டு போயிருக்கும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ