)
PM Modi Japan Visit: பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த சில நாள்கள் சுற்றுப்பயணம் உலகளவில் அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியாவுக்கு சென்றடைந்தார். ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்து சீனாவுக்கும் பிரமதர் பயணிக்க இருக்கிறார். இதனால்தான் பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
15வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். பிரதமர் மோடி 7வது முறையாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். இதுதான் ஜப்பான் பிரதமர் இஷிபா உடன் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் இந்தியா - ஜப்பான் உச்ச மாநாடாகும். கடந்த ஜூன் மாதத்தில் கனடாவில் நடந்த ஜீ7 உச்சிமாநாட்டில் மோடி - இஷிபா பங்கேற்றிருந்தனர்.
தனது ஜப்பான் மற்றும் சீனா சுற்றுப்பயணம் நாட்டின் நலன்களையும், முன்னுரிமைகளையும் மேலும் மேம்படுத்தும் என பிரதமர் மோடி நேற்றைய அவரது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், "அடுத்த சில நாட்களில், பல்வேறு இருதரப்பு மற்றும் பலதரப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன். ஜப்பானில், 15வது ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
In China, I will take part in the SCO Summit in Tianjin, a forum where India has always played an active and constructive role. India will keep working with SCO members to address various shared challenges. I will also be meeting President Xi Jinping, President Putin and other…
— Narendra Modi (@narendramodi) August 28, 2025
நமது சிறப்பு வியூக மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை ஆழப்படுத்துவது, பொருளாதார மற்றும் கலாச்சார இணைப்புகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செமி-கண்டக்டர்கள் போன்ற துறைகளில் நமது எதிர்கால பரிமாணத்தை எடுத்துக்காட்டும் வகையில், ஒரு செமி-கண்டக்டர் தொழிற்சாலையைப் பார்வையிட நான் செண்டாய்க்குச் செல்ல இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜப்பான் சென்றடைந்ததும் பிரதமர் போட்ட X பதிவில், "நான் டோக்கியோவிற்கு வந்துவிட்டேன். இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான வளர்ச்சி ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், இந்தப் பயணம் பிரதமர் இஷிபா மற்றும் பிறருடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், தற்போதுள்ள கூட்டாண்மையை ஆழப்படுத்தவும், புதிய ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
Landed in Tokyo. As India and Japan continue to strengthen their developmental cooperation, I look forward to engaging with PM Ishiba and others during this visit, thus providing an opportunity to deepen existing partnerships and explore new avenues of collaboration.… pic.twitter.com/UPwrHtdz3B
— Narendra Modi (@narendramodi) August 29, 2025
ஜப்பான் சென்றடைந்ததும், அங்கு வாழும் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதுகுறித்த புகைப்படங்களுடன் அவர் போட்டுள்ள X பதிவில், "டோக்கியோவில் உள்ள இந்திய மக்களின் அரவணைப்பு மற்றும் பாசம் என்னை மிகவும் கவர்ந்தது. நமது கலாச்சார வேர்களைப் பாதுகாப்பதிலும், ஜப்பானிய சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதிலும் அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இன்னும் சில மணிநேரங்களில், இந்தியா-ஜப்பான் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு வீரியம் சேர்ப்பதில் கவனம் செலுத்தும் வணிகத் தலைவர்கள் குழுவுடன் உரையாடவுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
Deeply touched by the warmth and affection of the Indian community here in Tokyo. Their commitment to preserving our cultural roots while contributing meaningfully to Japanese society is truly commendable.
— Narendra Modi (@narendramodi) August 29, 2025
In a few hours from now, will be interacting with a group of business… pic.twitter.com/cqLIthLxF8
ஆசியாவில் தனது நட்புறவை வளப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பே பிரதமர் மோடியின் இந்த ஜப்பான் பயணம் எனலாம். தொழில்நுட்பத்தில் ஜப்பானின் நிபுணத்துவமும், முதலீடு செய்வதற்கான ஜப்பானின் தயார்நிலையும் இந்தியாவின் வலிமைமிக்க மக்கள்தொகை மற்றும் விரிவடையும் சந்தையுடன் ஒத்துப்போகிறது. ஷிங்கன்சென் ரயில் பாதை, செமிகண்டக்டர்கள் பார்ட்னர்ஷிப், பயோகேஸ் ஆலைகள் மற்றும் மாணவர் பரிமாற்றங்கள் போன்ற திட்டங்கள் வளர்ச்சியை கொண்டுவரும்.
புவிசார் அரசியலில் தற்போது மாறிவரும் காட்சிகள், வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள், குறிப்பாக அதிகரித்து வரும் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புகள் போன்ற இக்கட்டில் இருந்து இந்தியாவிற்கு உதவ ஜப்பான் பக்கபலமாக நின்று நம்பகமான மற்றும் நீண்டகால நட்புறவை அளிக்கும் என நம்பலாம்.
அதேநேரத்தில் சீனா செல்வது குறித்தும் பிரதமர் மோடி நேற்று அவரது X தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில், "சீனாவில், தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சி மாநாட்டில் நான் பங்கேற்க இருக்கிறேன். அங்கு இந்தியா எப்போதும் ஒரு தீவிரமான மற்றும் ஆக்கபூர்வமான பங்கை வகித்து வருகிறது. பல்வேறு சவால்களை எதிர்கொள்ள SCO உறுப்பினர்களுடன் இந்தியா தொடர்ந்து பணியாற்றும். உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் பிற தலைவர்களையும் சந்திப்பேன்" என குறிப்பிட்டிருந்தார், பிரதமர் மோடி.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கடந்த 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில், சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்கள் ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ