வட இந்தியாவின் முக்கிய மாநிலமான மத்திய பிரதேசத்தில் கடந்த மே மாதம் நாட்டையே உலுக்கும் கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியது. அதாவது ராஜா ராகுவன்ஷி - சோனம் தம்பதியினர் திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக மேகாலையா சென்றனர். ஆனால் தனது கணவனை கள்ளக்காதலனுக்காக மனைவி சோனம் கூலிப்படை வைத்து கொலை செய்தார். தற்போது சோனத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மற்றொரு கொலை சம்பவம் நடந்துள்ளது. புத்தநாத சிங் என்பவருக்கும் சுனிதா என்பவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் புத்தநாத்தை மனைவி சுனிதாவுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இது குறித்து பெற்றோரிடமும் சுனிதா கூறியுள்ளார்.
இச்சூழலில் சுனிதா கணவன் புத்தநாத் சிங் சாப்பிடும் சாப்பாட்டில் விஷம் கலந்துள்ளார். அது தெரியாமல் உணவை சாப்பிட்ட புத்தநாத் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவரின் தாயார் ராஜ்மதி தேவி, தனது மருமகள் மீது கொலைக் குற்றம் சாட்டி புகார் அளித்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலிஸின் எஃப்ஜஆரின் படி, பஹோகுந்தர் கிராமத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட புத்நாத் சிங், சத்தீஸ்கரின் ராம்சந்திரபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள விஷுன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுநாத் சிங்கின் மகள் சுனிதாவை இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு மறுநாள் சுனிதா தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியபோது பிரச்சனை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. திருமணத்தின் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், புத்நாத்தை தனக்குப் பிடிக்கவில்லை என்றும், அவருடன் வாழப் போவதில்லை என்றும் கூறினார்.
ஜூன் 14 ஆம் தேதி, இவர்கள் சத்தீஸ்கரில் உள்ள ராமானுஜ்கஞ்ச் சந்தைக்குச் சென்றது. விவசாய பயன்பாட்டிற்கு பூச்சிக்கொல்லி மருந்து தேவை என்று கூறி, சந்தையில் இருந்து புத்நாத்தை பூச்சிக்கொல்லி மருந்து வாங்க சுனிதா வற்புறுத்தியதாக போலீசார் கூறுகின்றனர்.
ஜூன் 15 ஆம் தேதி இரவு, சுனிதா தனது கணவரின் உணவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலையில் புத்நாத் இறந்து கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது, அறிக்கை கிடைத்த பிறகு இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும்.
கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய ரங்கா காவல் நிலைய பொறுப்பாளர், "தாயின் புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவரின் மனைவியை நாங்கள் காவலில் எடுத்துள்ளோம். பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. அறிக்கை வந்த பிறகு மரணத்திற்கான காரணம் எங்களுக்குத் தெரியும். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
மேலும் படிங்க: அகமதாபாத் விமான விபத்து: விமானி இருக்கையின் தொழில்நுட்ப கோளாறுதான் காரணமா?
மேலும் படிங்க: ஈரானை தாக்க அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா? @PIBFactCheck
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









