Indian Railways: ரயிலில் பயணிக்கும்போது பெண் ஒருவர் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தாலியை தொலைத்துள்ளார். அவர்கள் உடனடியாக செய்த இந்த செயலால் தாலி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்து இங்கு காணலாம்.

Indian Railways: ரயில் பயணத்தில் பொருள்களை தவறவிடுவது இயல்பானதுதான். வாட்டர் பாட்டில் தொடங்கி சிறு சிறு பொருள்களை அப்படியே மறந்துவைத்துவிட்டு இறங்கிவிடுவோம். இதுபோன்ற பொருள்கள் என்றால் பரவாயில்லை கொண்டுவந்த லக்கேஜ், பெட்டிகளை தவறவிட்டால் நிச்சயம் கடும் சிரமத்திற்கு ஆளாவோம்.
மேலும், அந்த பெட்டியில் துணிகளை தவிர ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்ற முக்கியமான விஷயங்கள் இருந்தாலும் பிரச்னை இரட்டிப்பாகும் எனலாம். இருப்பினும், ரயில்வே காவல்துறையிடம் உடனே புகார் அளிக்கும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை உங்கள் பெட்டியை ரயிலேயே மறந்துவிட்டீர்கள் என்றாலோ அல்லது யாராவது திருடிவிட்டார்கள் என்றாலோ கூட அதை கண்டுபிடித்துவிடலாம்,
Indian Railways: ரயிலில் தாலியை தவறவிட்ட பெண்
இருப்பினும் பல பயணிகள் ரயிலில் காணாமல் போன அல்லது திருடு போன பொருள்கள் திருப்பி கிடையாது என்ற எதிர்மறையான முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அடுத்த கட்டம் குறித்து சிந்திக்க மறுக்கின்றனர். ஆனால், ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவரின் காணாமல் போன ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தாலியை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Indian Railways: ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தாலி
கடந்த திங்கட்கிழமை (ஜூலை 7) ரயில் எண் 18238 அம்ரித்சர் - பிலாஸ்பூர் செல்லும் சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸின் B2 பெட்டியில் ஒரு குடும்பம் மத்திய பிரதேசத்தின் போபால் முதல் சத்தீஸ்கரின் துர்க் நகரம் வரை பயணித்திருக்கிறது. அந்த குடும்பத்தில் பெண் ஒருவரின் தாலி காணாமல் போயுள்ளது. அதன் மதிப்பு ரூ.2.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.
Indian Railways: உடனடியாக வந்த புகார்
தீபக் ஸ்ரீவத்சவா என்பவர் உடனடியாக Rail Madad செயலி மூலமாக புகார் அளித்தார். அவர் அளித்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரயில்வே நிர்வாகம் உடனடியாக அந்த குடும்பத்தினர் பயணிக்கும் ரயிலின் தலைமை டிக்கெட் ஆய்வாளருக்கு தாலி காணாமல் போன தகவலை தெரிவித்துள்ளனர்.
Indian Railways: விரைந்து செயல்பட்ட ரயில்வே
இந்த தகவல் கிடைத்ததும், அந்த ரயிலின் பணியாளர்களை அழைத்து தாலியை தேடும்படி தலைமை டிக்கெட் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். பணியாளர்கள் ரயிலில் எங்கு தேடியும் தாலி கிடைக்கவில்லை. உடனடியாக தலைமை டிக்கெட் ஆய்வாளர் ராய்ப்பூர் ரயில் நிலையத்தின் ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்திருககிறார்.
பின்னர் போலீசார் B2 பெட்டியை சல்லடை போட்டு தேட தொடங்கியுள்ளனர். அப்போது பெண் பயணி ஒருவர் ஒரு தாலி கீழே கிடந்தது என கூறி அதை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். புகார் கொடுத்த உடனே ரயில்வே துறையும், போலீசாரும் விரைந்து செயல்பட்டது பயணிகளிடம் பாராட்டைப் பெற்றது எனலாம்.
Indian Railways: ரயில்வேயில் புகார் அளிக்க...
எனவே, ஒருவேளை ரயில் பயணத்தின்போது நீங்கள் ஏதாவது பொருளை தவறவிட்டால் உடனடியாக Rail Madad செயலி மூலமோ அல்லது Rail Madad இணையதளம் (https://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp) மூலமோ புகார் அளிக்கவும். பொருள்கள் காணவில்லை என்று மட்டுமில்லை பாலியல் தொல்லை அல்லது வேறு பிரச்னைகளுக்கும் இதில் புகார் அளிக்கலாம். ரயில்வே நிர்வாகத்திற்கு நீங்கள் ஏதாவது அறிவுறுத்த வேண்டும் என்றாலும் இவற்றில் அதனை தெரிவிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ