அரசு பேருந்தில் உடலுறவு..வைரலான வீடியோ! நடத்துனருக்கு வந்த வேட்டு..

Young Couple Intimate On Navi Mumbai MTC Bus : சமீபத்தில், அரசு ஏசி பஸ்ஸில் இளம் ஜோடி உடலுறவு வைத்துக்கொண்டனர். இதனை, யாரோ ரகசியமாக படம்பிடித்து இணையத்தில் வைரலாக்கி நிலையில், அந்த பேருந்தின் நடத்துனருக்கு ஆப்பு வந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 22, 2025, 01:08 PM IST
  • பேருந்தில் உடலுறவு..
  • நடத்துனர் மீது நடவடிக்கை..
  • வைரலான வீடியோ..
அரசு பேருந்தில் உடலுறவு..வைரலான வீடியோ! நடத்துனருக்கு வந்த வேட்டு..

Young Couple Intimate On Navi Mumbai MTC Bus : மும்பையில் இயங்கும், குளிர்சாதன வசதி பொருந்திய அரசு பேருந்தில், பல லட்சக்கணக்கானோர் தினமும் பயணித்து வருகின்றனர். இதில் பயணித்த ஒரு இளம் காதல் ஜோடி செய்த விஷயத்தால், இப்போது அந்த பேருந்தின் ஓட்டுநருக்கு பிரச்சனை எழுந்துள்ளது.

பேருந்தில் உடலுறவு:

இந்தியாவை பொறுத்தவரை, பொது இடங்களில் காதலர்கள் PDA (அநாகரிக தாெடுதல்) நடவடிக்கைகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் பல காதல் ஜோடிக்கள், தனி கிடைக்கும் பொது இடங்களில் தங்களுக்கு பிடித்தார் பாேல இருக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் தற்போதும் நடைப்பெற்றுள்ளது. 

மும்பையில், நாவி மும்பை (புதிய மும்பை) என்று அழைக்கப்படும் இடத்தில் குளிர்சாதன வசதி அடங்கிய அரசு பேருந்துகள் பல இயங்கி வருகின்றன. அப்படி இயக்கப்பட்டு வந்த ஒரு பேருந்தில், கடைசி சீட்டில் அமர்ந்திருந்த ஒரு காதல் ஜோடி, உடலுறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை, யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்திருக்கின்றனர். 22 விநாடிகள் அடங்கிய அந்த வீடியோவில், 20-25 மதிக்கத்தக்க வயதுக்குள் இருக்கும் அந்த ஜோடி, என்னவெல்லாம் செய்கின்றனர் என்பது படம்பிடிக்கப்பட்டுள்ளது. இது, இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே, மும்பை நகராட்சி கழகம் இது குறித்த விசாரணையை தொடங்கியது.

நடத்துனருக்கு வந்த வேட்டு..

அரசு பேருந்தில், காதலர்கள் உடலுறவு கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அந்த பேருந்தின் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அவர் பணியாற்றிய பேருந்தில், அவரது பார்வையில் எப்படி இப்படியொரு சம்பவம் நடந்தது என்பதை எழுத்துப்பூர்வமாக அவர் கூற வேண்டுமென அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த நடத்துனர், முதல் சீட்டில் அமர்ந்திருந்ததாகவும், கடைசி சீட்டில் என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆவலர் அனர்ஜித் சௌஹான் ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். இந்த சம்பவம் நடக்கும் போது, பஸ் பன்வேலில் இருந்து கல்யாண் என்கிற இடத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்ததாக கூறியிருக்கிறார். அப்போது பஸ் காலியாக இருந்ததாகவும், வெளியில் அதிக வாகன நெரிசலாக இருந்ததால், பஸ் மெதுவாக சென்று கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார். பேருந்துக்குள் நடப்பதை அருகில் இருந்த வாகனத்தில் இருந்து பார்த்த ஒருவர், ஜன்னல் வழியாக வீடியோ எடுத்ததாகவும், அப்படித்தான் இது வைரலானதாகௌவ்ம் கூறியிருக்கிறார். 

சம்பவத்தின் போது, அந்த பேருந்தின்  நடத்துனர் கவனக்குறைவாக இருந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பொதுப்பேருந்து இந்த மாதிரி விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்காக அல்ல என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். 

இது குறித்து பேசிய இன்னொரு அதிகாரி, இன்றைய இளைஞர்கள் தாங்கள் எந்த இடத்தில் என்ன செய்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இது போன்ற ஆபாசமான நடைமுறைகள் சட்டத்திற்கு புறம்பானது என்றும், இவை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | மகளின் மாமனாருடன் தாய்க்கு காதல்! நகை, பணத்துடன் ஓட்டம்..வைரல் செய்தி

மேலும் படிக்க | விமானத்தின் கழிவறையில் உடலுறவு கொண்ட ஜோடி! கையும்களவுமாக சிக்கிய வீடியோ!

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News