IPL 2018 தொடரின் 28-வது போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


இத்தொடரின் 28-வது போட்டியில் இன்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூர் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகளை பெற்றுள்ளது. அதேவேலையில் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பெற்றுள்ளது.


இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 9-ஆம் இவ்விரு அணிகளும் மோதின. இப்போட்டியில் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது!