)
Daily Habits That Will Sharpen Brain : வேகமாக இயங்கி வரும் இந்த உலகில், நம் வேலையையும் தனித்துவத்தையும் தக்க வைத்துக்கொள்ள கண்டிப்பாக நாம் ஷார்ப் ஆக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். நம்மை இப்படி கூர்மையாக வைத்துக்கொள்வதால் கண்டிப்பாக நம்மால் உயர்ந்த இடத்துக்கு செல்வதுடன், பெரிய ஆளாகவும் வளர முடியும். அப்படி உங்கள் புத்தியை கூர்மையாக வைத்துக்கொள்ளும் பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
தியானத்துடன் உங்கள் நாளை ஆரம்பிக்கலாம்:
தியானம் என்பது உங்களை நீங்கள் ரிலாக்ஸ் செய்வதற்கு மட்டுமல்ல, கவனச்சிதறலை தவிர்க்கவும் உதவுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் இப்படி தியானம் செய்வதால் நம் மூளை பகுதியில் இருக்கும் கார்டெக்ஸ் தடிமனாகும் என்று கண்டுபிடித்துள்ளது. மூளையின் இந்த பகுதி, நமது முடிவெடுக்கும் திறன் மற்றும் கவனத்தை அளிப்பதற்கு பொறுப்பாக இருக்கிறது. இதை வளர்த்துக்கொள்வதால் நாம் புத்திசாலியாகவும், உணர்ச்சி ரீதியாக வளர்ச்சி பெற்றவராகவும் இருக்க முடியும்.
தினசரி உடற்பயிற்சிகள்:
உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கானது மட்டுமல்ல, மனதிற்கானதும்தான். தினசரி உடற்பயிற்சி செய்பவர்கள் கொஞ்சம் குறைவான மன அழுத்தத்துடன் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்வதால், மூளைக்கு ரத்தம் செல்வது அதிகரிப்பதால், அதன் நரம்புகளும் சீரடைகின்றன. 30 நிமிட நடைப்பயிற்சி கூட இதற்கு உதவும் என்று கூறப்படுகிறது.
பிறருடன் பழகுதல்:
உங்களுக்கு தேவையான மற்றும் மனதுக்கு பிடித்தமான நபர்களுடன் நீங்கள் பழகலாம். இது, உங்கள் மூளையை வெற்றி பாதையை நோக்கி நடக்க செய்யுமாம். உங்கள் மனதுடன் ஒத்த நபர்களுடன் பேசுவதால், நமக்கு அறிவாற்றல் செயல்பாடு மேம்பட்டு, கவனம் அதிகரிப்பதோடு, நினைவுத்திறனும் அதிகரிக்குமாம். இது உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுப்பதோடு, நீங்கள் எதை நாேக்கி ஓட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல உங்களை நடக்க வைக்கும்.
தினமும் வாசிப்பது:
வாழ்வில் வெற்றி பெற்றவர்கள், பணக்காரர்களாக இருப்பவர்களிடம் இருக்கும் ஒரு பழக்கம், தினமும் வாசிப்பது. நாளிதழ், வலைதளம், புத்தகம், இணைப்பிதழ், ஆன்லைன் புத்தகம் என அவர்கள் எதையாவது ஒன்றை படித்துக்கொண்டே இருப்பார்களாம். இப்படி வாசிப்பதால், நாம் புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதோடு நம் மூளையின் ஆர்வத்தை தூண்டும் நரம்புகளும் இதில் செயல்படுமாம்.
சரியான உறக்கம்:
பலர், தங்களுக்கு தூங்குவதற்காக கிடைக்கப்படும் நேரத்தை மிகவும் மெத்தனமாக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இப்படி செய்து, உறக்கத்தை கெடுத்துக்கொள்வதால், மூளையில் செயல்பாடுகள் தடுமாறலாம். காரணம், உறங்கினால் மட்டுமே நமது மூளை சரியாக வேலை செய்யும், நினைவுகளை சரியாக வைத்துக்கொள்ளும். அப்படி செய்யவில்லை என்றால், மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும், நிலை தடுமாறும், கவனம் இருக்காது, எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. எனவே மூளைக்கு ரெஸ்ட் கொடுத்து நீங்கள் உறங்குவது மிகவும் நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ