7th Pay Commission: அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம்

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் அரசாங்கம் சமீபத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் கீழ் இப்போது ஊழியர் இறந்தால், அதற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் உதவி பெறுவார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 21, 2021, 02:07 PM IST
  • அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
  • ஓய்வூதியம் தொடர்பான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது அரசாங்கம்.
  • அரசு ஊழியரின் சார்புடையவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான 7 ஆண்டு கால நிபந்தனை விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
7th Pay Commission: அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம் title=

7th Pay Commission Latest News: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் அரசாங்கம் சமீபத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் கீழ் இப்போது ஊழியர் இறந்தால், அதற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் உதவி பெறுவார்கள். இதன் கீழ், ஓய்வூதிய பணத்தில் 50 சதவீதம் ஊழியரின் சார்புள்ளவர்களுக்கு வழங்கப்படும். இந்த முக்கியமான மாற்றங்களைப் பற்றி இந்த பதிவில்  காணலாம்.

சார்புள்ளவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும்

புதிய விதிப்படி, அரசு ஊழியரின் (Central Government Employees) சார்புடையவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான 7 ஆண்டு கால நிபந்தனை விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது 7 வருட சேவை நிறைவடைவதற்கு முன்னர் ஒரு ஊழியர் இறந்தால், ஓய்வூதிய பணத்தில் 50 சதவீதம் ஊழியரின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.

அதாவது, இப்போது ஒரு அரசு ஊழியர் இறந்த பின்னர் பெறப்படும் ஓய்வூதிய நிபந்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக பல சந்தர்ப்பங்களில், இந்த நிலை காரணமாக, குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய பயன் கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 7th pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் 28% DA உயர்வு

அரசு அகவிலைப்படியை சமீபத்தில் அதிகரித்தது

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு அகவிலைப்படியை (Dearness Allowance, DA) அதிகரித்தது. மத்திய அரசு அகவிலைப்படியில் இருந்த முடக்கத்தை நீக்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை தற்போதுள்ள 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நன்மைகள்

கொரோனா நெருக்கடி காரணமாக, 2021 ஜூலை வரை 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் (Pensioners) அகவிலைப்படி அதிகரிப்பதை நிறுத்த நிதி அமைச்சகம் 2020 ஏப்ரலில் முடிவு செய்தது. 30 ஜூன் 2021 வரை அவர்களுக்கு டி.ஏ.யின் நன்மை கிடைக்கவில்லை. இப்போது சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் பயனடைவார்கள். இதனால் அரசாங்கத்தின் செலவு சுமார் ரூ .34,401 கோடி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 7th pay commission தொடர்பான புதிய செய்திகள்! LTA காலக்கெடு நீட்டிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News