)
How Navratri Brings a Nation Together: இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி தொடங்கப் போகிறது. இந்த பண்டிகை வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்குகிறது. நவராத்திரி கொண்டாட்டங்கள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். தென்னிந்தியாவில் நவராத்திரி பண்டிகை கொலு இல்லாமல் முழுமையடையாது. அதே நேரத்தில் ஆந்திராவில் பொம்மல கொலுவு என்று அழைக்கப்படுகிறது, கர்நாடகாவில் பாம்பே ஹப்பா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நாளில் கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். ஒன்பது இரவுகள் என்று பொருள்படும் நவராத்திரி, சக்தி தேவி மற்றும் அவரின் ஒன்பது அவதாரங்களை வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது. துர்கா பூஜை என்பது, துர்கை தேவி கைலாச பர்வதத்தில் இருந்து தனது தாய் வீட்டிற்கு வருவதைக் குறிக்கிறது. இந்தியா அதன் பன்முகத்தன்மைக்கு பேர் பெற்றது. இந்தியா பன்முகத்தன்மை கொண்டதாக இருந்தாலும், கலாச்சாரம், பண்டிகைகள், கொண்டாட்டங்கள், சகோதரத்துவம் ஆகியவற்றால் இந்தியா ஒன்றுபட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமையாகும். நம்ப முடியவில்லையா? சரி, துர்கா பூஜையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நவராத்திரி பண்டிகை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய நிகழ்வாகும். இந்த கொண்டாட்டத்தை இன்னுமும் அழகாக்குவது வெவ்வேறு மாநிலங்களில், இப்பண்டிகைக்கு வெவ்வேறு பெயர்கள் மற்றும் வெவ்வேறு சடங்குகள் இருப்பதே ஆகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம்.
வட இந்தியாவில், இராவணனை இராமன் வென்றதைக் குறிக்கும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மனைவி சீதா மற்றும் சகோதரன் லட்சுமணனுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் கழித்த பிறகு ராமர் அயோத்திக்குத் திரும்பினார். திருவிழாவைக் கொண்டாட, மக்கள் இனிப்புகள் மற்றும் உணவுப் பொருட்களை கடவுளுக்கு வழங்குகிறார்கள். அம்மனை வழிபட மக்களும் விரதம் கடைப்பிடிக்கின்றனர்.
வட இந்தியாவிற்குப் பிறகு, கிழக்கு இந்தியா குறித்தும், அங்கு எப்படி துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் பார்ப்போம். மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நவராத்திரி என்பது துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது. வடகிழக்கு மற்றும் மேற்கு வங்க மக்கள், குறிப்பாக துர்கா தேவி மகிஷாசுரனை வென்றதை குறிக்கும் வகையில் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இந்த நாட்களில் பெண்கள், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள புடவைகளை அணிவார்கள். விளக்குகளால் தங்களின் வீடுகளை அலங்கரிப்பார்கள். மஹால்ய மற்றும் பிஜோய தசமி நாளில் இருந்து, சுவையான உணவு மற்றும் பல்வேறு சடங்குகள் இருக்கும் பந்தல்கள் அமைக்கப்படும். பிஜோய தசமி நாளில், துர்கா தேவியின் சிலைகள் தண்ணீரில் கரைக்கப்படும்.
நவராத்திரி என்பது மேற்கு இந்திய பகுதிகளில் குறிப்பாக குஜராத்தின் மிக முக்கியமான பண்டிகை. சக்தி தேவியை வழிபட பெண்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் அலங்கரிக்கப்படும். குஜராத்தின் பாரம்பரியமான கர்பா நடன நிகழ்வுகள் நடக்கும். ஆண்களும் பெண்களும் தங்களின் தாண்டியாக்களுடன் பொது இடங்களில் நடமாடுவார்கள்.
தென்னிந்தியாவில் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு என்று தனி வழி உள்ளது. நவராத்திரியை கொண்டாடும் வகையில் வீடுகளில் பல்வேறு பொம்மைகள் மற்றும் சிற்பங்கள் 'கொலு' என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலுமே நவராத்திரி பண்டிகைக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. கர்நாடகாவில், கொலு என்பது பாம்பே ஹப்பா என்று பிரபலமாக அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் பொம்மை கொலு என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையில் கேரளா இதை பொம்மா குல்லு என்றும், ஆந்திராவில் பொம்மலா கொலுவு என்றும் அழைக்கப்படுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ