அட்சய திருதியை என்றால்‌ வளர்க என்று பொருள்‌. அட்சய திருதியை நாளில்‌ செய்யும்‌ செயல்‌ மேன்மேலும்‌ வளரும்‌ என்பது நம்பிக்கை. அட்சய திருதியை இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம்‌ கல்‌ உப்பு. மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ இடைக்கும்‌. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாள்‌ அட்சய திருதியை 3-ஆம்‌ எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில்‌ தங்கத்தை பிரதிபலிக்கிறார்‌. பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்சய திருதியை நாளில், தானம், தியாகம், துறவு மற்றும் தவம் போன்றவற்றைச் செய்வது குறிப்பாக பலனளிக்கும். இந்த ஆண்டு, அட்சய திருதியை அன்று பஞ்ச மகாயோகம் உருவாகிறது. இந்த நிலை 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் ஏற்றது. அட்சய திருதியை இவர்களுக்கு மகிழ்ச்சியை பரிசாக தரும். எனவே இந்த ஆண்டு அட்சய திருதியை எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: செல்வ செழிப்பில் மிதக்க போகும் 6 ராசிக்காரர்கள்


ரிஷபம்: இந்த அட்சய திருதியை ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. தடைப்பட்ட சில வேலைகளை முடிக்க முடியும். நல்ல செய்திகள் வரலாம். புதிய வேலையைத் தொடங்குபவர்களுக்குப் பெரிதும் லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நிறைவேறும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த அட்சய திருதியை சிறப்பான வெற்றியைத் தரும். அதிர்ஷ்டம் ஆதரிக்கும். பதவி உயர்வு-அதிகரிப்பு காணலாம், இது அவர்களின் அனைத்து நிதி சிக்கல்களையும் முடிவுக்கு கொண்டுவரும். 


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த அட்சய திருதியை மிகவும் சிறப்பானது. இதுவரை முடங்கிக் கிடந்த பணிகள் தற்போது விரைந்து முடிக்கப்படும். வாழ்வில் வசதிகள் பெருகும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.


மகரம்: இந்த அட்சய திருதியை மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.


அட்சய திருதியை நாள் ஷாப்பிங் செய்வதற்கு மிகவும் ஏற்றது. இது தவிர, இந்த நாள் தானம் செய்வதற்கும் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. எனவே, இன்றைய தினம் ஆடை, உணவு, தண்ணீர் போன்றவற்றை ஏழைகளுக்கு தானமாக வழங்குங்கள்.


அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம் வருமாறு:- 
காலை 8 மணி முதல் 9 மணி வரை, 
பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, 
மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்கலாம்.


மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரத்தால் குபேரனாகப் போகும் 3 ராசிக்காரர்கள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR