ஏடிஎம் -ல் பணம் எடுத்தால் பணம் பிடிக்கப்படும், எவ்வளவு பிடிக்கப்படும்? - முழு விவரம்

ATM transaction fee hike : மே 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் உயரும் என அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 29, 2025, 10:26 AM IST
  • ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்
  • மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் விதிமுறைகள்
  • 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்
ஏடிஎம் -ல் பணம் எடுத்தால் பணம் பிடிக்கப்படும், எவ்வளவு பிடிக்கப்படும்? - முழு விவரம்

ATM transaction fee hike News : ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI) வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களின் உச்ச வரம்பை நீக்கியது. இந்த மாற்றம் 1 மே 2025 முதல் go into effect ஆகும். இதனால் ஏடிஎம்களில் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மீறி செய்தால் இனி கூடுதல் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதுவரை 21 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வந்த நிலையில் இப்போது அது 23 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

புதிய ஏடிஎம் கட்டண விதிகள்

1. இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை

உங்கள் சொந்த வங்கி ஏடிஎம்-ல்: மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். பிற வங்கி ஏடிஎம்-ல் மெட்ரோ நகரங்களில் அதாவது, சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும். இதுதவிர மற்ற நகரங்கள்/கிராமங்களில் மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். 

2. கட்டணம் எவ்வளவு?

இலவச பரிவர்த்தனைகளை மீறினால், ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ₹23 வசூலிக்கப்படும்.

3. "இண்டர்சேஞ்ச் கட்டணம்" என்றால் என்ன?

ஒரு வங்கி மற்றொரு வங்கியின் ஏடிஎம் பயன்படுத்தும் போது செலுத்த வேண்டிய கட்டணம். இது இப்போது வாடிக்கையாளர்களுக்கு அதிக கட்டணமாக பரிமாறப்படுகிறது.

ஏன் இந்த மாற்றம்?

வங்கிகளின் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளன குறிப்பாக ATM பராமரிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளது. 2019-ல் RBI நியமித்த கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 2021-ல் இண்டர்சேஞ்ச் கட்டணம் ₹15-ல் இருந்து ₹17-ஆகவும், நான்-ஃபைனான்ஷியல் பரிவர்த்தனைகளுக்கு ₹5-ல் இருந்து ₹6-ஆகவும் உயர்த்தப்பட்டது.

கூடுதல் கட்டணம் தவிர்ப்பது எப்படி?

- உங்கள் சொந்த வங்கி ஏடிஎம்/கிளையை மட்டும் பயன்படுத்தவும் (மாதத்தில் 5 முறை இலவசம்).
- UPI (PhonePe, Google Pay), கேஷ்லெஸ் பேமெண்ட் போன்ற மாற்று வழிகளை பயன்படுத்தவும்.
- ஒரு முறை அதிக தொகையை எடுத்து வைத்துக்கொள்ளலாம் (ஆபத்து குறைவு).
- வெளிநாடு செல்லும் போது, ஃபோரின் ATM கட்டணங்களை சரிபார்க்கவும் (₹100-₹300 வரை).

உங்கள் வங்கியின் வலைத்தளம் மற்றும் செயலியை சரிபார்த்து, கட்டண விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | வந்தாச்சு அகவிலைப்படி உயர்வு: ஊதியம், ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான கணக்கீடு இதோ

மேலும் படிக்க | கௌதம் அதானிக்கு மேலும் சிக்கலா? இந்திய அரசின் உதவியை நாடிய அமெரிக்கா!

மேலும் படிக்க | மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன் கிடைக்கும்: மத்திய அரசின் மெகா பரிசு.... புதிய ஓய்வூதியத் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News