EPFO Latest Update : EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) உறுப்பினர்களுக்கு UPI (யுனிபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ்) மற்றும் ATM மூலம் ₹1 லட்சம் வரை PF பணத்தை உடனடியாக திரும்பப் பெறும் வசதி விரைவில் தொடங்க உள்ளது.
முக்கிய விவரங்கள்:
- UPI/ATM மூலம் PF திரும்பப் பெறுதல் - மே 2024 இறுதி அல்லது ஜூன் முதல்
- ரூ. 1 லட்சம் வரை உடனடி பணம் (Few Minutesல்)
- தானியங்கி கிளெயிம் செயல்முறை - 95% கிளெயிம்கள் இப்போது ஆட்டோமேடிக்
- கல்வி, வீடு, திருமணத்திற்கான PF திரும்பப் பெறுதல் எளிதாகும்
எப்போது தொடங்கும்?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தேவ்ரா கூறியதாவது, "மே இறுதி அல்லது ஜூன் முதல் EPFO உறுப்பினர்கள் UPI மற்றும் ATM மூலம் தங்கள் PF பணத்தை உடனடியாக திரும்பப் பெறலாம். இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்!" என தெரிவித்துள்ளார். மேலும், NPCI (National Payments Corporation of India)-ன் பரிந்துரையை தொழில்துறை அமைச்சகம் ஏற்றுள்ளது.
EPFO-ன் புதிய அப்டேட்டுகள்:
- UPI மூலம் PF கணக்கு இருப்பு சரிபார்த்தல்
- ரூ. 1 லட்சம் வரை உடனடியாக திரும்பப் பெறுதல்
- வங்கி கணக்கை தேர்ந்தெடுக்கும் வசதி
- கல்வி, வீடு கட்டுதல், திருமணத்திற்கான PF திரும்பப் பெறுதல் எளிதாக்கப்பட்டுள்ளது
- கிளெயிம் செயல்முறை இப்போது வெறும் 3 நாட்கள் (முன்பு 10-15 நாட்கள் எடுத்தது)
EPFO-ன் PF திரும்பப்பெறும் முறையில் பெரும் மாற்றம்!
தற்போது PF தொகையை திரும்பப் பெற 2-3 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் புதிய முறையில் UPI அல்லது ATM மூலம் சில நிமிடங்களிலேயே பணம் கிடைக்கும். முன்பு சில நிபந்தனைகளின் படி ₹50,000 மட்டுமே திரும்பப் பெற முடிந்தது. இப்போது ₹1 லட்சம் வரை பெறலாம். முந்தைய முறையில் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பித்து காத்திருக்க வேண்டியிருந்தது. புதிய முறையில் நேரடியாக UPI/ATM மூலம் எளிதாக பணத்தை பெற முடியும். இந்த மாற்றம் 7 கோடி EPFO உறுப்பினர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது யாருக்கு பயனுள்ளது?
7 கோடி EPFO உறுப்பினர்களில் அவசர பணத் தேவை உள்ளவர்கள், கல்வி/திருமணம்/வீடு கட்டும் நபர்களுக்கு இந்த புதிய அம்சம் பேருதவியாக இருக்கும்.
EPFO-ன் இந்த புதிய அம்சம், உங்கள் PF பணத்தை மிக எளிதாக்கும்!
மேலும் படிக்க | பரஸ்பர நிதியம்: SIP அல்லது STP முறையில் முதலீடு... இரண்டில் அதிக பலன் கொடுப்பது எது?
மேலும் படிக்க | நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: மத்திய அரசின் புதிய மெகா ஓய்வூதிய திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









